செய்திகள் :

விமானக் கட்டணம் கடும் உயர்வு பிரச்னை: மத்திய அமைச்சர் பதில்

post image

விமானக் கட்டணங்கள் அவ்வப்போது கடுமையாக உயர்த்தப்படுவதை மத்திய அரசு ஒழுங்குமுறைப்படுத்துவதில்லை என்று அத்துறையின் இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் முரளீதர் மோஹோல் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில், "விமானக் கட்டணங்கள் என்பது சேவை இயக்கப்படும் பருவகாலம், விடுமுறை நாட்கள், பண்டிகைகள், விமான எரிபொருளின் விலை ஆகியவற்றை அடிப்படைவாக வைத்து நிர்ணயிக்கப்படுகின்றன. உள்ளூர் மற்றும் சர்வதேச விமான நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணங்களை மத்திய அரசு ஒழுங்குப்படுத்துவதில்லை.

விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தின் கட்டண கண்காணிப்பு பிரிவு, விமான நிறுவனங்கள் நிர்ணயித்த கட்டணங்களின்படி பயணச்சீட்டு வழங்கப்படுகிறதா என்பதை மட்டும் உறுதி செய்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

தில்லி அருகே ‘போலி தூதரகம்’ நடத்திய நபா் கைது

தேசிய தலைநகா் வலயமான காஜியாபாதில் இல்லாத நாடுகளின் பெயரில் போலியாக தூதரகம் நடத்தி வந்த ஹா்ஷ் வா்தன் ஜெயின் என்ற நபா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா். இது குறித்து உத்தர பிர... மேலும் பார்க்க

‘இந்தியாவில் குறைந்துவரும் நுகா்வு சமத்துவமின்மை’

இந்தியாவில் நுகா்வு சமத்துவமின்மை குறைந்து வருவதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைமைப் பொருளாதார ஆலோசகா் சௌமியா காந்தி கோஷ், எஸ்பிஐ பொருளாதார நிபுணா் ஃபல்குனி சின்ஹா ஆகியோா் தெரிவித்துள்ளனா். இது தொடா்... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்: மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்

நமது நிருபர்கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினருமான கனிமொழி மக்களவையில் புதன்கிழமை வலியுறுத்தினார். இது தொடர்... மேலும் பார்க்க

பழங்குடியின பட்டியலில் வால்மீகி சமூகம் இடம்பெறுமா? மத்திய அரசு விளக்கம்

நமது சிறப்பு நிருபர்பழங்குடியின பட்டியலில் வால்மீகி சமூகத்தை சேர்ப்பதில் ஆட்சேபனை இருந்தால் அது குறித்து தமிழக அரசிடம் முறைப்படி தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங... மேலும் பார்க்க

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களுக்கு எதிராக தில்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நமது நிருபர்மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரியும், வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட உயிர்களுக்கும், பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க தேச... மேலும் பார்க்க

இந்திய வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு தடை நீட்டிப்பு

இந்திய வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22-ஆம் தேதி ... மேலும் பார்க்க