செய்திகள் :

விமானங்களில் நிகழாண்டு 183 தொழில்நுட்பக் கோளாறுகள்: மத்திய அரசு

post image

புது தில்லி: விமானங்களில் நிகழாண்டு ஜூலை வரை 183 தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டதாக இந்திய விமான நிறுவனங்கள் கூறியுள்ளன’ என மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

கடந்த மாதம் அகமதாபாதில் ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 260 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து விமானங்களில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மற்றும் சோதனைகளை மேற்கொள்ள இந்திய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.

இந்நிலையில், விமானங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு சோதனைகள் குறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு மக்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘நிகழாண்டு ஜூலை 23 வரை விமானங்களில் 183 தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டதாக இந்திய விமான நிறுவனங்கள் மத்திய அரசிடம் தெரிவித்தன. 2021-இல் 514, 2022-இல் 528, 2023-இல் 448, 2024-இல் 421 தொழில்நுட்பக் கோளாறுகளும் கண்டறியப்பட்டன. இவற்றை பராமரிக்க கடந்த 5 ஆண்டுகளில் 2,094 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ஸ்மாா்ட் மீட்டா்கள்: தமிழ்நாடு, பஞ்சாப், கேரளம் ஆகிய 3 மாநிலங்கள் மற்றும் புது தில்லி, அந்தமான் மற்றும் நிகோபாா், புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் தற்போது வரை ஒரு ஸ்மாா்ட் மீட்டா் கூட பொருத்தப்படவில்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

95 லட்சம் சுற்றுலாப் பயணிகள்: ஜம்மு-காஷ்மீருக்கு நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 95 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் பயணம் மேற்கொண்டதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவித்தாா்.

உரிமை கோரப்படாத ரூ.67,003 கோடி: நாட்டில் உள்ள தனியாா் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் சேமிப்புக் கணக்குகளில் ரூ.67,003 கோடி பணம் உரிமை கோரப்படாமல் உள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி மக்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் உரிமை கோரப்படாமல் ரூ.19,329 கோடி பணம் உள்ளதாக குறிப்பிடப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூர் எதிர்காலத்திலும் தொடரும்! - மக்களவையில் மோடி

ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று(ஜூலை 29) நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:கா... மேலும் பார்க்க

டிரம்ப் பேசியது பொய் என மோடி கூறவில்லை: ராகுல் காந்தி கருத்து

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியது பொய் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!

பொதுத் துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் கடந்த மூன்று நிதியாண்டுகளாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை பணம், ரூ. 52,174 கோடியை எட்டியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கிகளில் உள்ள வைப்புத்தொகை ரூ. 42... மேலும் பார்க்க

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? -மக்களவையில் அனல் பறக்க விவாதம்

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.ராகுல் காந்தி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் பிரதமர் மோட... மேலும் பார்க்க

யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் கதறியது: பிரதமர் மோடி

இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது வெறும் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்தன், 190 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை என மக்களவையில் பிரதமர... மேலும் பார்க்க

மதத்தின் பெயரில் நடந்த சதியே பஹல்காம் தாக்குதல் : மக்களவையில் மோடி உரை

பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரால் சதி நடந்ததாகவும், ஆனால், இந்திய மக்களின் ஒற்றுமை அதனை முறியடித்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஆபரேஷன் சிந்தூர்... மேலும் பார்க்க