செய்திகள் :

விருதுநகர்: பேருந்திலிருந்து சாலையில் விழுந்த ஒரு வயதுக் குழந்தை; அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி

post image

ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முத்துலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன்குமார். இவர் தனது சகோதரி மற்றும் சகோதரியின் இரண்டரை வயது மற்றும் 1 வயது கைக்குழந்தைகளை அழைத்துக்கொண்டு மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் செல்லும் தனியார் பேருந்தில் பயணித்துள்ளார்.

பேருந்தின் முன்பக்க படிக்கு அருகாமையில் உள்ள இருக்கையில் அமர்ந்து வந்த அவர்கள், மீனாட்சிபுரம் விளக்கு அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். 

குழந்தை சாலையில் விழும் காட்சி

அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்

அப்போது சட்டெனப் பேருந்து நின்றதால் மதன்குமார் கையில் இருந்த 2 1/2 வயது குழந்தையுடன் பேருந்துக்குள் கீழே விழுகிறார். மேலும் அவரது சகோதரியின் கையிலிருந்த ஒரு வயதுக் குழந்தை கையிலிருந்து முன்பக்கப்படி வழியாக சாலையில் விழுந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவர் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைக்கிறார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் மதன்குமார் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் இரு குழந்தைகளும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`உயிர் பலி வாங்கும் தொப்பூர் கணவாய்' - விபத்தை தவிர்க்க மேம்பால பணி ஆரம்பம் | Photo Album

தொப்பூர் கணவாய் மேம்பாலப்பணி ஆரம்பம்தொப்பூர் கணவாய் மேம்பாலப்பணி ஆரம்பம்விபத்தை குறைக்க மேம்பாலப்பணி ஆரம்பம் Thoppur kanavaiவிபத்தை குறைக்க மேம்பாலப்பணி ஆரம்பம் Thoppur kanavaiவிபத்தை குறைக்க மேம்பாலப... மேலும் பார்க்க

கவரப்பேட்டை: ``தண்டவாளத்தில் நட்டு, போல்ட்டுகளை கழற்றியதே ரயில் விபத்துக்கு காரணம்'' - ரயில்வே

2024-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்து உள்ள கவரப்பேட்டை பகுதியில் சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அந்த எக்ஸ்பிரஸ் ரயில் மைசூரில் இருந... மேலும் பார்க்க

வயநாடு: கல்லறையில் டாய்ஸ், தின்பண்டங்கள் - கண்கலங்க வைத்த முதலாமாண்டு நினைவேந்தல் காட்சிகள்

கேரள வரலாற்றில் கருப்பு நாளாகக் கருதப்படும் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. ஜூலை 30 - ம் தேதியான நேற்று, முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு கேரள அரசு ஏற்பாடு செய்தி... மேலும் பார்க்க

சதுரகிரி மலையில் வேகமாய் பரவும் காட்டுத்தீ; பக்தர்கள் செல்ல தடை; தீயை அணைக்கப் போராடும் வனத்துறை

விருதுநகர் மாவட்டஸ்ரீவில்லிபுத்தூர்அருகே வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரிசுந்தர மகாலிங்கம்கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: சரக்கு வாகனம் - ஆட்டோ மோதல்; விபத்தில் ஓட்டுநர்கள் இருவர் உயிரிழந்த சோகம்..

ராமேஸ்வரம் ஏர்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது நண்பர்கள் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் மற்றும் அகஸ்தியன். ஆட்டோ ஓட்டுநர்களான இவர்கள் மூவரும் மாதேஸ்வரனுக்கு சொந்தமான ஆட்டோவிற்கு தரச்சா... மேலும் பார்க்க

மார்த்தாண்டம்: பைக் விபத்தில் 2 மாணவர்கள் பலி, போராட்டம்.. யார் காரணம்? - போலீஸார் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு பஸ் மற்றும் பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தேங்காய்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த அஜ்மல், அப்சல் ஆகிய இரண்டு... மேலும் பார்க்க