செய்திகள் :

விருந்தினர்களை எழுப்ப "சிவப்பு பாண்டா"- சீன ஹோட்டலில் ஓர் இரவு தங்க இவ்வளவு கட்டணமா?!

post image

சீனாவின் சோங்கிங் பெருநகரத்திற்கு அருகிலுள்ள சிலெஹே லெடு லியாங்ஜியாங் ஹாலிடே என்ற ஹோட்டல், விருந்தினர்களை எழுப்ப "சிவப்பு பாண்டாக்களை" பயன்படுத்தியதற்காக சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்த ஹோட்டலில் தங்கும் விருந்தினர்களை காலையில் அறைக்குள் வந்து காட்டு விலங்கான சிவப்பு பாண்டா எழுப்புவதுதான் இந்த ஹோட்டலில் பிரபலமான ஒன்றாக இருக்கிறது.

இவ்வாறு விருந்தினர்களை சிவப்பு பாண்டாக்கள் எழுப்புவதை பிரபலமாக கொண்ட இந்த ஹோட்டல், ஒரு இரவுக்கு சுமார் ரூ.24,160 (2,000 யுவான்) வசூலிக்கிறது.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து இந்த ஹோட்டல் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

விருந்தினர்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் இடையேயான இந்த நெருங்கிய தொடர்பை உடனடியாக நிறுத்துமாறு ஹோட்டலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹோட்டல் ஊழியர்களின் கூற்றுப்படி, ”ஒரு மிருகக்காட்சி சாலையில் இருந்து கடன் வாங்கி வரப்பட்ட சிவப்பு பாண்டா ஹோட்டலில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு ஊழியரும் பணியமர்த்தப்பட்டுள்ளது. பாண்டாவுக்கு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

காலையில் 9:00 மணிக்கு இந்த சிவப்பு பாண்டாவை விருந்தினர் அறைக்கு அந்த ஊழியர் அழைத்துச் செல்கிறார். அது சுதந்திரமாக சுற்றித் திரியும். சில சமயங்களில் அவர்களின் படுக்கையில் ஏறும். விருந்தினர்கள் அந்த பாண்டாவுடன் நெருங்கி பழக அனுமதிக்கப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.

உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF) படி, உலகில் 10,000க்கும் குறைவான சிவப்பு பாண்டாக்கள் மட்டுமே உள்ளன. மேலும் இது சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) அழிந்து வரும் உயிரினமாக பட்டியலிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி: அருங்காட்சியகத்தில் 300 ஆண்டுகள் பழைமையான ஓவியத்தை சேதப்படுத்திய பார்வையாளர் - எப்படி?

இத்தாலிய அருங்காட்சியகத்தில் செல்ஃபி எடுக்கும் போது பார்வையாளர் ஒருவர் 300 ஆண்டுகள் பழைமையான கலைப்படைப்பை சேதப்படுத்தியுள்ளார்.புளோரன்ஸின் புகழ்பெற்ற உஃபிஸி கேலரியில் உள்ள விலைமதிப்பற்ற 300 ஆண்டுகள் ப... மேலும் பார்க்க

Disneyland-ல் 9 வயது சிறுமியுடன் திருமண ஏற்பாடு; கைதான 22 வயது நபர்; என்ன நடந்தது?

பாரிஸின் டிஸ்னிலேண்ட் தீம் பார்க்கில் 9 வயதில் சிறுமியுடன் போலியான திருமணம் நடத்த முயன்றதாகப் பிரிட்டிஷ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த சனிக்கிழமை காலை தீம் பார்க்கை திருமணத்திற்காக புக் செ... மேலும் பார்க்க

Cafe: ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய்; இருட்டான இருக்கை வசதி- போலீசார் சோதனையில் சிக்கிய கஃபேக்கள்!

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள சில கஃபேக்கள், காதல் ஜோடிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வசூலித்து, இருட்டான இருக்கை வசதியை வழங்கியுள்ளது.அந்த பகுதியில் கஃபே நடத்துபவர்கள் காதல் ஜோடிகளுக்கு கூடுதல் ... மேலும் பார்க்க

சீனா: வயிற்றுக்குள் டூத் பிரஷுடன் 52 ஆண்டுகள் வாழ்ந்த நபர் - உடலில் எந்த தொந்தரவும் இல்லாதது எப்படி?

வயிற்று வலியால் அவதிப்பட்ட 64 வயது நபரின் குடலில் டூத் பிரஷ் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிட்டத்தட்ட இந்த டூத் பிரஷ் அவரின் குடலில் 52 ஆண்டுகள் இருந்திருக்கிறது.சீனாவைச் சேர... மேலும் பார்க்க

சென்னை: ரூ.50,000 மதிப்புள்ள வாட்சை சர்வீஸ் கொடுத்த பெண் - இழுத்தடித்த நிறுவனத்திற்கு அபராதம்!

சென்னையைச் சேர்ந்த ஒருவர், வாட்ச் சர்வீஸ் கொடுத்த இடத்தில் திருப்பி தர தாமதமானதால் அதற்கு வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெற்றிருக்கிறார்.சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சுவாதி என்பவர் அவரது குடும்ப உறுப்... மேலும் பார்க்க

அடையாள அட்டை இல்லை; மும்பை ஐ.ஐ.டி வகுப்பறையில் வாலிபர் - விசாரணையில் ஆச்சர்யமடைந்த போலீஸ்

மும்பை விமான நிலையத்தின் ஓடுதளத்திற்குள் நேற்று முன் தினம் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துவிட்டார். அதேபோன்று மும்பை ஐ.ஐ.டிக்குள் மர்ம நபர் அத்துமீறி நுழைந்துள்ளார். மும்பை ஐ.ஐ.டி வளாகத்திற்குள் இ... மேலும் பார்க்க