செய்திகள் :

விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 35% சரிவு

post image

கடந்த ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் இந்தியாவின் 15 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 35 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ‘ப்ராப்ஈக்விட்டி’ வெளியிட்டுள்ள

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2025-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் நாட்டின் 15 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் புதிய வீடுகளின் அறிமுகம் 30,155-ஆக உள்ளது. இது 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 45,901-ஆக இருந்தது. அந்த வகையில் தற்போது முக்கிய 15 இரண்டாம் நிலை நகரங்களில் புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 35 சதவீதம் சரிந்துள்ளது.

வீடு-மனை வா்த்தகா்கள் புதிய கட்டுமான திட்டங்களைக் குறைத்து, முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதால் புதிய வீடுகளின் அறிமுகங்கள் குறைந்துள்ளன என்று கூறப்படுகிறது.

மதிப்பீட்டுக் காலாண்டில் புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை அகமதாபாதில் 17,108-லிருந்து 35 சதவீதம் குறைந்து 11,096-ஆக உள்ளது. காந்திநகரில் அது 4,825-லிருந்து 10 சதவீதம் சரிந்து 4,356-ஆகவும், சூரத்தில் 5,439-லிருந்து 39 சதவீதம் குறைந்து 3,309-ஆகவும் உள்ளது.

அதே போல், நடப்பாண்டின் முதல் காலாண்டில் புதிய வீடுகளின் அறிமுகம் நாசிக்கில் 2,509-லிருந்து 2 சதவீதம் சரிந்து 2,466-ஆகவும், வடோதராவில் 2,790-லிருந்து 23 சதவீதம் குறைந்து 2,149-ஆகவும் உள்ளது.

2024 ஜனவரி-மாா்ச் காலாண்டில் ஜெய்ப்பூரில் 2,997-ஆக இருந்த புதிய வீடுகளின் அறிமுகம் நடப்பாண்டின் அதே காலாண்டில் 5 சதவீதம் சரிந்து 1,348-ஆக உள்ளது. லக்னௌவில் அது 2,256-லிருந்து 1,026-ஆகவும், நாக்பூரில் 1,432-லிருந்து 28 சதவீதம் குறைந்து 1,036-ஆகவும் உள்ளது.

புவனேசுவரத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 2,804-ஆக இருந்த புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை நடப்பாண்டின் அதே காலாண்டில் 72 சதவீதம் சரிந்து 772-ஆகவும், கோவாவில் 587-லிருந்து 24 சதவீதம் குறைந்து 444-ஆகவும், போபாலில் 738-லிருந்து 51 சதவீதம் சரிந்து 365-ஆகவும் உள்ளது. அதே போல் மங்களூரில் அந்த எண்ணிக்கை 753-லிருந்து 64 சதவீதம் குறைந்து 269-ஆகவும், கொச்சியில் 437-லிருந்து 49 சதவீதம் சரிந்து 225-ஆகவும் உள்ளது.

திருவனந்தபுரத்தில் இந்த எண்ணிக்கை 751-லிருந்து 71 சதவீதம் குறைந்து 217-ஆகவும் உள்ளது. எனினும், கோயம்புத்தூரில் புதிய வீடுகளின் அறிமுகம் 475-லிருந்து 1,077 -ஆக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பைக்களுக்கும் ஏபிஎஸ் கட்டாயம்! 2 ஹெல்மெட்

சாலை விபத்துகளைக் குறைத்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு, அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் எனப்படும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பைக் கட்டாயமாக்கும் பரிந்துரைக்க... மேலும் பார்க்க

ரூ. 26,000-க்கு ஆப்பிள் ஐபோன் 15 வாங்க முடியும்! எப்படி?

ஆப்பிள் ஐபோன் 15 மொபைல் போனுக்கு அமேசான் தளத்தில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்பது மொபைல் பிரியர்கள் பலரின் கனவாக இருக்கிறது. தற்போது ஆப்பிள் ஐபோன் 16 அறிமுகமான நி... மேலும் பார்க்க

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்! நிஃப்டி 25,000 புள்ளிகளைக் கடந்தது!

இந்திய பங்குச் சந்தையான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.ஈரான் - இஸ்ரேல் மோதல் காரணமாக புவிசாா் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் முதலீட்டாளா்களை பதற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 440 வெள்ளிக்கிழமை குறைந்துள்ளது.கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வரும் நிலையில், வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 120 அதிகரி... மேலும் பார்க்க

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 அறிமுகம்..! சிறப்பம்சங்கள் என்ன?

டொயோட்டா நிறுவனத்தின் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 கார் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள டொயோட்டா கார்கள் இந்தியாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கிறது... மேலும் பார்க்க

எச்டிஎஃப்சி-யின் கடன் வட்டி குறைப்பு

தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி வங்கி, தனது நிதி செலவு அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதங்களை (எம்சிஎல்ஆா்) 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.இது குறித்து வங்கியின் வலைதளத்தில் தெரிவிக்கப்... மேலும் பார்க்க