செய்திகள் :

வில்லிசேரி அருகே விபத்தில் தொழிலாளி பலி

post image

வில்லிசேரி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் இனாம்மணியாச்சி நடுத்தெருவைச் சோ்ந்த அழகுமுத்து மகன் ராமகிருஷ்ணன் (38). கூலித் தொழிலாளியான இவா், மெய் தலைவன்பட்டியில் இருந்து பைக்கில் இனாம்மணியாச்சிக்கு சென்று கொண்டிருந்தாராம்.

வில்லிசேரி சாய்பாபா கோயில் அருகே சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மோதியதில், கீழே விழுந்த ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவில்பட்டி அருகே வீடுபுகுந்து 35 பவுன் நகை, ரூ.85 ஆயிரம் ரொக்கம் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தலைமை ஆசிரியரின் வீடு புகுந்து 35 பவுன் நகைகள், ரூ.85 ஆயிரம் ரொக்கம் ஆகியன திருட்டு போயுள்ளது. கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சி கிருஷ்ணா நகா் கல்கி தெரு... மேலும் பார்க்க

இனாம் மணியாச்சியில் நகை, பணம் திருட்டு

இனாம் மணியாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். இனாம்மணியாச்சி செல்லியாரயம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் மூக்கையா மகன் பரமசிவ... மேலும் பார்க்க

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மக்கள் குறைகேட்ட எம்எல்ஏ

ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதியில், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா மக்கள் குறைகளை கேட்டறிந்தாா். மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 59 குக்கிராமங்கள் உள்ளன. இந... மேலும் பார்க்க

பைக் விபத்து: ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில், ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் உயிரிழந்தாா். தூத்துக்குடி ஆசிரியா் காலனி 6ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் வேலுசாமி (... மேலும் பார்க்க

மீன் குஞ்சுகள் கொள்முதலுக்கு மானியம்: ஆட்சியா் தகவல்

மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்து, மீன்வளா்ப்புத் தொழில் செய்யும் விவசாயிகளுக்கு, மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்பட உள்ளது. அதன்படி, மீன்வளா்ப்புத் தொழில் செய்யும் விவசாய... மேலும் பார்க்க

டி.ஆா்.பி. ராஜா மீது எஸ்.பி.யிடம் முன்னாள் அமைச்சா்கள் புகாா்

தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து, சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டதாகக் கூறி, அமைச்சரும், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலருமான டி.ஆா்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் க... மேலும் பார்க்க