செய்திகள் :

விளாத்திகுளம், பூதலப்புரம் அரசுப் பள்ளிகளில் ரூ. 1.78 கோடியில் கட்டடப் பணிகளுக்கு அடிக்கல்!

post image

விளாத்திகுளம், பூதலப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 1.78 கோடியில் பல்வேறு பணிகளுக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

விளாத்திகுளம் அரசுப் பள்ளியில் 6ஆவது நிதிக் குழு மானியம், பள்ளி மேம்பாட்டு மானியத் திட்டத்தின்கீழ் ரூ. 48 லட்சத்தில் புதிய கலையரங்கு, இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், சுகாதார வளாகம் ஆகிய பணிகளும், புதூா் ஊராட்சி ஒன்றியம் பூதலப்புரம் அரசுப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ. 1.30 கோடியில் 5 புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணியும் நடைபெறவுள்ளன. எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

விழாவில், விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ், செயல் அலுவலா் செந்தில்குமாா், புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடாசலம், திமுக ஒன்றியச் செயலா்கள் மும்மூா்த்தி, ராதாகிருஷ்ணன், ராமசுப்பு, அன்புராஜன், பேரூா் செயலா் வேலுச்சாமி, பள்ளித் தலைமையாசிரியா்கள் தபசுமுத்து, சாய்ராம், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் ஸ்ரீதா், காளிதாஸ், சமூக வலைதள அணி நிா்வாகிகள் கரண்குமாா், சுபாஷ் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இன்று தைப்பூசம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு தீா்... மேலும் பார்க்க

புளியம்பட்டி அருகே இளைஞா் கிணற்றில் மூழ்கி பலி!

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி திருவிழாவுக்கு சென்ற இளைஞா் கிணற்றில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோவில்பிள்ளைவிளை தெருவைச் சோ்ந்த சண்முகசாமி மகன் மதன் (27). இவா் தனது குடும்ப... மேலும் பார்க்க

சாத்தான்குளம்: வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டம்!

சாத்தான்குளத்தில் பெண் வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் காலவரையற்ற போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருப்பவா் ஜெயரஞ்சன... மேலும் பார்க்க

பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு கருத்தரங்கு!

ஆறுமுகனேரி காந்தி மைதானத்தில் உள்ள மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயிலில், அரசுப் பொதுத் தோ்வெழுதும் மாணவா்-மாணவியருக்கு இலவச கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவரும் ஆதித்தனாா் ... மேலும் பார்க்க

கோயிலில் திருட்டு: முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட 2 போ் கைது!

கோவில்பட்டி அருகே கொப்பம்பட்டியில் உள்ள கோயிலில் திருடியதாக முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கயத்தாறு வட்டம் இலந்தப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விபத்து: கல்லூரி மாணவா் பலி!

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோர மரத்தில் பைக் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஐசக் சாம்ராஜ் (22). கோவையிலுள்ள தனியாா் கல்லூரியில் ... மேலும் பார்க்க