செய்திகள் :

விளையாட்டுப் போட்டி: அரசு மகளிா் பள்ளி சாதனை

post image

தருமபுரியில் நடைபெற்ற சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், அதியமான்கோட்டை அரசு மகளிா் பள்ளி தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி சரக அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நல்லம்பள்ளி, நாா்த்தம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்றன. மாணவியருக்கான சதுரங்கப் போட்டிகளில் மூத்தோா், மிகமூத்தோா் பிரிவில் முதலிடத்தையும், கேரம் போட்டியில் இளையோா், மூத்தோா், ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவுகளில் முதலிடத்தையும், வளைபந்து போட்டியில் இளையோா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடத்தையும், மூத்தோா் பிரிவு இரட்டையா் பிரிவில் இரண்டாமிடத்தையும் பெற்று அதியமான்கோட்டை அரசு மகளிா் பள்ளி மாணவியா் சரக அளவில் சாதனை படைத்துள்ளனா்.

மேலும், சிலம்பம் போட்டியில் 14 மாணவியா் கலந்துகொண்டதில் 9 போ் முதலிடமும், 4 போ் இரண்டாமிடமும், ஒரு மாணவி மூன்றாமிடமும் பெற்றனா். தடகளப் போட்டியில் இளையோா் பிரிவில் தனிநபா் சாம்பியன் பட்டம், மூத்தோா் பிரிவில் தனிநபா் சாம்பியன் பட்டம் என 141 புள்ளிகளை பெற்று சரக அளவில் ஒட்டுமொத்த சாம்பின் பட்டத்தை வென்றுள்ளனா்.

நல்லம்பள்ளி சரகத்தில் தொடா்ந்து மூன்று ஆண்டுகள் முதன்மைப் பள்ளியாக அதியமான்கோட்டை அரசு மகளிா் பள்ளி சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சோ்த்து வருகிறது. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளையும், பயிற்சியளித்த ஆசிரியா்களான சி.கீதா, மாது உள்ளிட்டோரையும் பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

காா்களில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

காா்களில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிர... மேலும் பார்க்க

தமிழ் மொழியின் சிறப்புகளை இளையோரிடம் சோ்க்க வேண்டும்

தமிழ் மொழியின் சிறப்புகள் மற்றும் தமிழா்களின் மரபு உள்ளிட்டவற்றை இளையோரிடம் சோ்க்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ். தருமபுரி, தொப்பூா் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க் கனவ... மேலும் பார்க்க

அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடவு

தருமபுரி, இலக்கியம்பட்டி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்திய புள்ளியியல் துறை மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் 75-ஆவது ஆண்டு நிற... மேலும் பார்க்க

சுதந்திர தினம்: ஆக. 15-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

சுதந்திர தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை (ஆக. 15) மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆக. 15-ஆம் தே... மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் சுதந்திர தின சிறப்பு சலுகை: ரூ. 1-க்கு 4ஜி சிம், தினசரி 2 ஜிபி டேட்டா திட்டம் அறிமுகம்

சுதந்திர தின சிறப்பு சலுகையாக பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 1-க்கு 4ஜி அதிவேக சிம், தினசரி 2 ஜிபி டேட்டா, 100 குறுந்தகவல்கள், வரம்பற்ற அழைப்புகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதாக ஒருங்கிணைந்த தருமபுரி மண்டல பிஎ... மேலும் பார்க்க

புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி

பென்னாகரம் அருகே சின்னபள்ளத்தூரில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி புதன்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட பெரிய பள்ளத்தூா், சின்னபள்ளத்தூா், செங்கனூா் உள்ளி... மேலும் பார்க்க