செய்திகள் :

விழுப்புரத்தில் விவசாயிகள் மறியல்

post image

விழுப்புரம்: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக் கூடத்துக்கு வந்த விளைபொருள்களை ஏலத்தில் எடுக்க வியாபாரிகள் வராததை கண்டித்து விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருள்களுக்கான தொகை இதுவரை ஒழுங்குமுறை விற்பனைக் கூட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் இ - நாம் திட்டத்தின்படி விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வியாபாரிகள் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது . இந்த முறைக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்தாலும், வியாபாரிகள் பழைய நடை முறையை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு விவசாயிகள் கொண்டு வந்த விளைப்பொருள்களை ஏலத்தில் எடுப்பதற்கு வியாபாரிகள் புதன்கிழமை வரவில்லை. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.

விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு புதன்கிழமை வந்த விவசாயிகள், தங்களின் பொருள்கள் ஏலத்தில் எடுக்கப்படாமல் இருந்ததை அறிந்து, கிழக்கு பாண்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார், விவசாயிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர்.

வியாபாரிகள் போராட்டம் காரணமாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.10 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

Farmers staged a road blockade on Wednesday to protest the failure of traders to come to the regulated market to collect their produce from the auction.

மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று?: ப.சிதம்பரம் கேள்வி

மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று என முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் ம... மேலும் பார்க்க

மோடி-டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமரிசனம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், மோடி-டிரம்ப் நட்புக்கு அர்த்தம் ... மேலும் பார்க்க

பதிவுத் தபால் சேவையை நிறுத்தம்: சு.வெங்கடேசன் கண்டனம்

128 ஆண்டு நடைமுறையில் இருந்த பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவிற்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.எளிய மக்கள் பயன்படுத்தி வரும் பதிவுத் தபால் ச... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய மயிலை 7 நிமிடத்தில் வனத்துறையிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்: வைரலாகும் விடியோ!

கோவை சிங்காநல்லூர் பகுதியில் மின் கம்பத்தில் அடிபட்டு கிடந்த மயிலை, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் ஏழு நிமிடங்களில் மீட்டு வனத்துறை வசம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.புதன்கிழமை மாலை, சிங்காநல்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 40,500 கன அடியாக சரிவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 40,500 கன அடியாக நீடிக்கிறது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்... மேலும் பார்க்க

விவசாய கிணற்றில் விழுந்த காட்டு யானை பலி

கோவை சோலைப்படுகை பகுதியில் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த காட்டு யானையை போளுவாம்பட்டி வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் சாடிவயல் அடுத்த சோலைப்படுகை பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு வனப்பகுத... மேலும் பார்க்க