செய்திகள் :

விழுப்புரம் -ராமேசுவரம் சிறப்பு ரயில் பெண்ணாடம், அரியலூரில் நின்று செல்லும்

post image

விழுப்புரம் : விழுப்புரத்திலிருந்து ராமேசுவரம் வரை இயக்கப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் பெண்ணாடம், அரியலூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பெண்ணாடம் மற்றும் அரியலூர் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் இந்த தகவல் குறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சிகோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கோடைக்காலத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ராமேசுவரத்துக்கு செல்லும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும் விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக ராமேசுவரம் வரை சிறப்பு அதிவிரைவு ரயிலை மே 2 -ஆம் தேதி முதல் தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது.

வார நாள்களில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் இந்த சிறப்பு ரயில் ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளது. மேலும் பெண்ணாடம், அரியலூர் ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில்நின்று செல்லும்.

விழுப்புரத்திலிருந்து திங்கள்,செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் அதிகாலை 4.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -ராமேசுவரம் சிறப்பு அதி விரைவு ரயில் (வ.எண்.06105), முற்பகல் 11.40 மணிக்கு ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு சென்றடையும். எதிர்வழித்தடத்தில் அதே நாள்களில் பிற்பகல் 2.35 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்படும் ராமேசுவரம் -விழுப்புரம் சிறப்பு அதிவிரைவு ரயில் (வ.எண்.06106) இரவு 10.35 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

இந்த ரயில்கள் விருத்தாசலம், பெண்ணாடம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். புதிய ரயில் நிறுத்தங்களாக அறிவிக்கப்பட்ட பெண்ணாடத்துக்கு காலை 5.05 மணிக்கு வரும் விழுப்புரம் -ராமேசுவரம் சிறப்பு அதிவிரைவு ரயில் (வ.எண்.06105) காலை 5.06 மணிக்குப் புறப்படும். இதுபோல, காலை 5.25 மணிக்கு அரியலூர் வந்து5.26 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டுச் செல்லும்.

எதிர்வழித்தடத்தில் இரவு 8.44 மணிக்கு வந்தடையும் ராமேசுவரம் -விழுப்புரம் சிறப்பு அதிவிரைவு ரயில் (வ.எண்.06106) இரவு8.45 மணிக்குப் புறப்பட்டு, பெண்ணாடத்துக்கு இரவு 9.10 மணிக்கு சென்றடையும், தொடர்ந்து இங்கிருந்து இரவு 9.11 மணிக்கு விருத்தாசலத்துக்குப் புறப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவை ரயில் நிலையங்களிலும், ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவும் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல்: முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

நாடு முழுவதும் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தொற்று பரவலைத் தடுக்க, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தெற்காசிய நாடுகளைத் தொடர்ந்து இந்த... மேலும் பார்க்க

புதிய பயண அட்டை வரும்வரை அரசுப் பேருந்தில் மாணவா்கள் இலவசமாக பயணிக்கலாம்

புதிய பயண அட்டை கிடைக்கும் வரை அரசு பேருந்தில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், முதல்வர... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் சந்திப்பு

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார். எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடந்த சந்திப்பில், மாநிலங்களவை சீட் தொடர்பாக ஆலோசனை எனத் தகவல் தெரியவந்துள்ளது.... மேலும் பார்க்க

பாமக அலுவலக முகவரியை மாற்றிய அன்புமணி

பாமக அலுவலகத்தை சென்னை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு அன்புமணி மாற்றியுள்ளார். பாமகவினருக்கு வழங்கப்பட்ட உறுப்பினர் படிவத்தில் கட்சி அலுவலக புதிய முகவரி இடம் பெற்றுள்ளது. அதன்படி, படிவத்தில் தேன... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலி... மேலும் பார்க்க

தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்

தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே ரிசர்வ் வங்கி தொடர வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மத்திய நிதியமைச்சர் நிர... மேலும் பார்க்க