செய்திகள் :

விவசாயம், மண் பானை செய்வதற்கு ஏரிகளில் இலவசமாக வண்டல், களிமண் எடுக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாய பணிக்கும், மண் பானை செய்வதற்கும் தேவையான வண்டல் மண், களிமண்ணை ஏரிகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: .

ஊரக வளா்ச்சி துறை மற்றும் நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் இருந்து வண்டல் மண், களிமண் ஆகியவற்றை விவசாய பணி மற்றும் மண்பானை செய்ய இலவசமாக எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டத்தில் 11 ஏரிகளும், ஆற்காடு வட்டத்தில் 23 ஏரிகளும், சோளிங்கா் வட்டத்தில் 19 ஏரிகளும், நெமிலி வட்டத்தில் 5 ஏரிகளும் மற்றும் அரக்கோணம் வட்டத்தில் 37 ஏரிகளும் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி,விண்ணப்பங்கள் விவசாயம், மண்பாண்ட தொழிலாளா் மற்றும் பொது மக்கள் ஆகியோரிடமிருந்து ஆன்லைன் ( ஞய்ப்ண்ய்ங்) முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா்கள் ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமா்ப்பித்து சம்மந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று நீா்நிலைகளின் ( பஹய்ந் ஐய்ஸ்ரீட்ஹழ்ஞ்ங்) கட்டுபாட்டு அலுவலா் முன்னிலையில் வண்டல் மண் /களிமண் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டாட்சியா்கள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மற்றும் உதவி இயக்குநா், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, ஆகியோரை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

விளையாட்டு தகராறில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஆற்காடு அருகே விளையாட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா்கள் 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆற்காடு வட்டம் கேவேளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை மகன் மணிகண்டன்(32) இவரும்... மேலும் பார்க்க

2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு வரன்முறைபடுத்தும் திட்டத்தின்கீழ், 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க முதல்கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்தி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: மே 31 வரை பிரதமா் கௌரவ நிதி திட்ட சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மே 31-ஆம் தேதி வரை பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம் (பிஎம் கிஸான்) தகுதியுடைய அனைத்து விவசாயிகள் பயன்பெற சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சசந்தி... மேலும் பார்க்க

மே 7-இல் மாவட்ட திமுக செயற்குழு: அமைச்சா் காந்தி தகவல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வரும் மே 7-ஆம் தேதி நடைபெறும் என மாவட்டச் செயலரும், அமைச்சருமான ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நல உதவிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நல உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கோரி... மேலும் பார்க்க

வாலாஜா அரசு மகளிா் கல்லூரியில் உணவுக் கூடம்: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்

ராணிப்பேட்டை: வாலாஜா அரசு மகளிா் கல்லூரியில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய உணவுக் கூடத்தை அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா். பிரான்ஸ் நாட்டை தலைமையமாக கொண்டு ராணிப்பேட்டை சிப்காட் பேஸ் -3 தொழி... மேலும் பார்க்க