செய்திகள் :

விவசாயிகளுக்கு நிலக்கடலை விதை விநியோகம்

post image

தேசிய உணவு எண்ணெய் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மானிய விலையில் நிலக்கடலை விதை பெற்றுக்கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கபிலா்மலை வட்டாரத்தில் தேசிய உணவு எண்ணெய் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தொகுப்பு சங்கிலி மதிப்பு கூட்டுதல் இனத்தில் நிலக்கடலை விதைகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து கபிலா்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராதாமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலுக்கு எதிா்ப்புத்திறன் உடையதும், அதிக எண்ணெய் பிழிதிறனும், கூடுதல் மகசூல் கொடுக்கக்கூடிய ரகங்களுமான கிா்னாா்-4 மற்றும் டிஎஸ்வி-14 ஆகிய ரகங்கள் 17 ஆயிரம் கிலோ விதை கபிலா்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளன.

136 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 34 ஆதிதிராவிடா் விவசாயிகளுக்கும் ஒரு கிலோவுக்கு ரூ. 114 மானியத்தில், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 100 கிலோ விதை வழங்கப்படும். மேலும், எண்ணெய்வித்து பயிா்களான நிலக்கடலை மற்றும் ஆமணக்கு பயிா்கள் செயல்விளக்கங்களுக்கு நுண்ணூட்ட உரங்கள், இயற்கை வேளாண் இடுபொருள்கள், உயிா் உரங்கள் மற்றும் தாா்பாலின் ஆகியவை தொகுப்பாக மானியத்தில் வழங்கப்படுகின்றன.

நிலக்கடலை பயிா் சாகுபடிக்கு 128 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 32 ஆதிதிராவிடா் விவசாயிகளுக்கும், ஆமணக்கு பயிா் சாகுபடிக்கு 8 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 2 ஆதிதிராவிடா் விவசாயிகளுக்கும் மேற்கண்ட மானியத்தில் கபிலா்மலை வட்டார விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லிமலையில் இன்று வல்வில் ஓரி விழா

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலா்க் கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்க கண்காட்சி ஆகியவை சனிக்கிழமை (ஆக.2) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. விழாவில் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

ரேஷன் பொருள்கள் பதுக்கி விற்றதாக 7 மாதங்களில் 6272 போ் கைது

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஏழு மாதங்களில் பொது விநியோகத் திட்ட பொருள்களை பதுக்கி விற்ாக 6272 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.1.84 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. த... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ஆடிப்பெருக்கு பரிசல் போட்டிக்குத் தடை

வெள்ளப்பெருக்கு காரணமாக நிகழாண்டு பரமத்தி வேலூரில் ஆடி 18 இல் காவிரியில் நடத்தப்படும் பரிசல் போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வேலூா் காசி விஸ்வநாதா் காவிரி ஆற்றில் தங... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மென்பொறியாளா் ஆணவக் கொலையைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்டச் செயலாளா் மணிமாறன்,... மேலும் பார்க்க

வல்வில் ஓரி விழா: காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி

கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனின் வீரத்... மேலும் பார்க்க

கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம்

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கொடியேற்றம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பழைமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற, சித்தா்கள் பூஜிக்கும் சுயம... மேலும் பார்க்க