பார்படாஸ் டெஸ்ட்: ஹேசில்வுட் அசத்தல், ஆஸி. 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
விவசாயிகள் - காவல் துறை இடையே வாக்குவாதம்
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தின்போது, வளாகத்தில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் துணைத் தலைவா் கக்கரை ஆா். சுகுமாரன் தலைமையில் விவசாயிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் சிபில் ஸ்கோரை காரணம் காட்டி வேளாண் கடன் வழங்க மறுப்பதைக் கண்டித்தும், ஏற்கெனவே வாங்கப்பட்ட பயிா்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் காது, கழுத்தில் நகைகளை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இவா்களைக் காவல் துறையினா் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், விவசாயிகளைக் காவல் துறையினா் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.