செய்திகள் :

விஷ்ணு விஷால் - ராம் குமார் கூட்டணி: படப்பிடிப்பு நிறைவு!

post image

நடிகர் விஷ்ணு விஷால் தான் 150 நாள்களாக நடித்துவந்த ’இரண்டு உலகம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாகக் கூறியுள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சிறிது ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த ராம்குமார் மீண்டும் அவரை வைத்தே இயக்கிய ‘ராட்சசன்’ திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தார்.

தற்போது, 3-ஆவதாக இந்தக் கூட்டணி ‘இரண்டு உலகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் இணைந்துள்ளது.

இந்தப் படத்தை சதய்ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது விஷ்ணு விஷாலின் 21ஆவது படமாக உருவாகிவருகிறது.

கடைசிகட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ராட்சசன் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், 150 நாள்களாக நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார். மேலும், அதில் ராம்குமார் இந்த முறையும் புதியதாக தனித்துவமாக ஆர்வத்தை தூண்டும்படி படத்தை சமைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

கூலி - ஹிந்தியில் வேறு பெயர்! ஏன்?

ஹிந்தியில் கூலி திரைப்படத்தின் பெயரை மாற்றியுள்ளனர்.கூலி திரைப்படம் இந்தியளவில் பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந... மேலும் பார்க்க

மன்னிப்புக் கேட்கிறேன்: மணிரத்னம்

இயக்குநர் மணிரத்னம் தக் லைஃப் திரைப்படத்திற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் கடந்த ஜுன். 5 அன்று வெள... மேலும் பார்க்க

சசிகுமாரின் ஃப்ரீடம் படப்பிடிப்பு நிறைவு!

சசிகுமார் நடிப்பில் உருவாகும் ஃப்ரீடம் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ள இப்படத்திற்கு 'ஃப்ரீடம் ஆகஸ... மேலும் பார்க்க

ஸ்விடோலினா, அலெக்ஸாண்ட்ரோவா வெற்றி!

ஜொ்மனியில் நடைபெறும் பேட் ஹோம்பா்க் மகளிா் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். முதல் சுற்றில், போட்டித்தரவரிசைய... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு 371!

இங்கிலாந்துக்கு எதிரான லீட்ஸ் டெஸ்ட்டில் 2-ஆவது இன்னிங்ஸையும் அபாரமாக விளையாடிய இந்தியா, 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோா் சதம் விளாசி ஸ்கோரை பலப்படுத்தினா். இங்கிலாந்துக... மேலும் பார்க்க

முதல் இந்தியராக ரிஷப் பந்த் சாதனை!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய முதல் இந்தியா் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்தாா்.அடுத்து, ஒரே டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய இந்தியா்கள் வரிசையில் 7-... மேலும் பார்க்க