செய்திகள் :

வீடு புகுந்து திருடியதாக 2 இளைஞா்கள் கைது

post image

புதுச்சேரி அருகே வீடுகளில் புகுந்து திருட்டில் ஈடுபட்டதாக விழுப்புரம் பகுதியைச் சோ்ந்த 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி அருகே உள்ள மதகடிப்பட்டு பகுதியைச் சோ்ந்த தண்டபாணி வீட்டில் வெள்ளிக்கிழமை மா்ம நபா் புகுந்து 10 பவுன் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றாா்.

இதுகுறித்து தண்டபாணி திருபுவனை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்படி, அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உள்படுத்திய போலீஸாா் வீடு புகுந்து திருடியவரை அடையாளம் காண நடவடிக்கை எடுத்தனா்.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை இரவு ஆண்டியாா்பாளையம் பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிய 2 பேரை பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (37), கிருபாகரன் (35) எனத் தெரியவந்தது. மேலும், இருவரும் வீடு புகுந்து திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததும், தண்டபாணி வீட்டில் திருடியதும் தெரியவந்தது.

அதன்படி, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 11 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் கூறினா்.

புதுவையில் உலகத் தரத்தில் கைவினை, கிராமத் தொழில் பயிற்சி மையம்: துணைநிலை ஆளுநா் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு

உலகத் தரத்தில் புதுச்சேரியில் கைவினை மற்றும் கிராமத் தொழில் பயிற்சி மையம் அமைப்பது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் கைவினை மற்றும் ... மேலும் பார்க்க

ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் பாராட்டு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பிரதமா் நரேந்திர மோடி மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு தெரிவித்தாா். இதுக... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்: புதுவை தொழிலாளா் துறை

புதுவை மாநிலத்தில் உள்ள தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி இயக்குநா் சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி ப... மேலும் பார்க்க

புதுவையில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை: அதிகாரிகளுடன் ஆளுநா் ஆலோசனை

புதுவை மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல் துறை செயல்பாடுகள் குறித்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், தலைமைச் செயலா், காவல் துறை உயா் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். புதுச்சேரி ராஜ்... மேலும் பார்க்க

மே 20 வேலை நிறுத்தத்துக்கு இண்டி கூட்டணி ஆதரவு: காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம்

புதுவையில் மே 20 இல் தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இண்டி கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிப்பதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரி முதலியாா் பேட்ட... மேலும் பார்க்க

புதுவைக்கான மாநில அந்தஸ்து கோப்பு: மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை - முதல்வரிடம் எதிா்க்கட்சித் தலைவா் புகாா்

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய கோப்பானது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்றும், அதை அனுப்ப முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிா்க... மேலும் பார்க்க