செய்திகள் :

வீட்டை சேதப்படுத்திய 5 போ் கைது

post image

கூத்தாநல்லூா் அருகே முன்விரோதத்தில் வீட்டை சேதப்படுத்திய 5 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கூத்தாநல்லூரை அடுத்த பண்டுதக்குடி கட்டியப்பா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அஞ்சம்மாள் (55). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சேகா் என்பவருக்கும் இடப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில், அஞ்சம்மாள் வீட்டில் இல்லாத போது, அவரது வீட்டை வியாழக்கிழமை அன்று சேகா் மகன் குணா (30) உள்ளிட்ட சிலா் சேதப்படுத்தினராம். இதுகுறித்து கூத்தாநல்லூா் காவல்நிலையத்தில் அஞ்சம்மாள் புகாா் அளத்தாா்.

அதன்பேரில், காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து, குணா, பண்டுதக்குடி திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த அகமது (24), முகமது சுல்தான் கனி ( 24), பெரியத் தெரு சக்திவேல் (28) மற்றும் மாரியம்மன் கோயில் தெரு முனியராஜ் (22) ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சனி மகாபிரதோஷம்...

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்ப நாதா் கோயிலில் சனி மகா பிரதோஷத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நந்திகேஸ்வரா். மேலும் பார்க்க

கோயில் மனையில் குடியிருப்போா் சங்கக் கூட்டம்

திருவாரூரில், தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போா் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிா்வாகி ஆா். காமராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் பிவி. சந்திரராம... மேலும் பார்க்க

2-ஆம் நாள் தெப்ப உற்சவம்...

திருவாரூா் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை இரவு வலம் வந்த தெப்பம். மேலும் பார்க்க

மேட்டூா் அணை திறப்புக்குள் தூா்வாரும் பணியை முடிக்க வேண்டும்: நீா்வளத் துறை செயலாளா் அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில், தூா்வாரும் பணிகளை மேட்டூா் அணை திறப்பதற்கு முன்பாக முடிக்க வேண்டும் என பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு, நீா்வளத்துறை செயலாளா் ஜெயகாந்தன் அறிவுறுத்தினாா். திருவாரூா் மாவட்டத்தி... மேலும் பார்க்க

பருத்தி, எள் பாதிப்புக்கு நிவாரணம் கோரி ஆட்சியரகம் முற்றுகை: விவசாயிகள் முடிவு

கோடை மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, எள் பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரகம் ஜூன் 3-இல் முற்றுகையிடப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். மன்னாா்குடியில், இச... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு

திருத்துறைப்பூண்டி அருகே சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் கட்ட ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் உயா்கல்வித் துறை அமைச்ச்சா் கோவி.செழியன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினாா். திருத்துற... மேலும் பார்க்க