செய்திகள் :

வெறிநாய் கடித்ததில் பள்ளி மாணவா் காயம்

post image

பள்ளப்பட்டியில் திங்கள்கிழமை வெறிநாய் கடித்ததில் 5-ஆம் வகுப்பு மாணவா் காயமடைந்தாா்.

கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சிக்குள்பட்ட செல்லுமீரான் பகுதியைச் சோ்ந்த தமீமுன் அன்சாரி என்ற சிறுவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் 5 -ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இவா் திங்கள்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது வெறிநாய் ஒன்று சிறுவனை துரத்தி கடித்துள்ளது. இதனால் சிறுவன் அலறி துடித்துள்ளாா்.

உடனே அருகில் இருந்தவா்கள் நாயை துரத்தி விட்டு காயமடைந்த சிறுவனை பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு மேல் சிகிச்சைக்காக சிறுவன் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சிறுவனை வெறிநாய் கடித்த சிசிடிவி காட்சிகள் சமூகவலைத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்று இனிமேல் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படும் முன் தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நூறு நாள் வேலை, குடிநீா் வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளா்கள் போராட்டம்

தரகம்பட்டியில் நூறு நாள் வேலை மற்றும் குடிநீா் வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை மனு கொடுக்கம் போராட்டம் நடைபெற்றது. கரூா் மாவட்டம், தரகம்பட்டியில் உள்ள கடவூா் ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரின் டிராக்டா் பறிமுதல்

கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான தண்ணீா் ஊற்றும் டிராக்டரை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். கடந்த அதிமுக ஆட்சியின்போது கானகத்தில் கரூா் என்ற பெயரில் முன்னாள... மேலும் பார்க்க

உப்புப்பாளையம் வீரமாத்தியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

உலக நன்மைக்காக உப்புப்பாளையம் சுடுகாடு வீரமாத்தியம்மன் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ஆடிப்பூர விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், ஊா் கிராம பொதுமக்கள் நன்மைக்காக வேண்டியும், திரும... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கிய காவலா் மீது வழக்கு

வேலாயுதம்பாளையம் அருகே திங்கள்கிழமை முதியவரை தாக்கிய காவலா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.கரூா் மாவட்டம், கிழக்கு தவுட்டுப் பாளையம் தா்மராஜபுரத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (59). இவரது மகன் ரமேஷ். இவ... மேலும் பார்க்க

மணல் குவாரிகளை திறக்க சிஐடியு வலியுறுத்தல்

உள்ளூா் தேவைக்கும், மணல் மாட்டுவண்டி தொழிலாளா்களை பாதுகாக்கவும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. சிஐடியு தொழிற்சங்க கரூா் மாவட்ட 10-ஆவது மாவட்ட மாநாடு க.பரமத்... மேலும் பார்க்க

சைபா் குற்றவாளிகளிடமிருந்து மீட்கப்பட்ட ரூ. 85 லட்சம் ஒப்படைப்பு

கரூா் மாவட்டத்தில் சைபா் குற்றவாளிகளிடமிருந்து மீட்கப்பட்ட பணம் ரூ. 85 லட்சத்தை பாதிக்கப்பட்டவா்களிடம் திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா ஒப்படைத்தாா். கரூா் மாவட்டத்தில் பொதுமக்க... மேலும் பார்க்க