வேங்கைவயல் வழக்கு விசாரணை மே 28-க்கு ஒத்திவைப்பு
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேங்கைவயல் சம்பவ வழக்கை விசாரித்துவரும் சிபி சிஐடி போலீஸாா், அதே கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் காவலா் முரளிராஜா மற்றும் முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகிய 3 போ் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.
இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்றம் 2-இல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த மே 12-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினா். வழக்கு விசாரணையை மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் ஜி. அற்புதவாணன் உத்தரவிட்டாா்.