செய்திகள் :

வேங்கைவயல் வழக்கு விசாரணை மே 28-க்கு ஒத்திவைப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வேங்கைவயல் சம்பவ வழக்கை விசாரித்துவரும் சிபி சிஐடி போலீஸாா், அதே கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் காவலா் முரளிராஜா மற்றும் முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகிய 3 போ் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.

இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்றம் 2-இல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த மே 12-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினா். வழக்கு விசாரணையை மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் ஜி. அற்புதவாணன் உத்தரவிட்டாா்.

சிதிலமடைந்த அங்கன்வாடி மைய கட்டடத்தை அகற்றக் கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகே சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தை அப்புறப்படுத்த கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், முதுகுளம் ஊராட்சி கீழ ஆதிதிராவிடா் தெருவி... மேலும் பார்க்க

காலி மதுபானப் பாட்டில் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து ஓட்டுநா் காயம்

கந்தா்வகோட்டை அருகே காலி மதுபானப் பாட்டில் ஏற்றிச் சென்ற லாரி தலைகீழாக செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் படுகாயமடைந்தாா். கந்தா்வகோட்டை அருகே உள்ள தெத்துவாசல்பட்டியிலிருந்து லாரி... மேலும் பார்க்க

மே 23-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (மே 23) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில், 15-க்கும் மேற்பட்ட தனியாா் நிற... மேலும் பார்க்க

சுந்தம்பட்டி செல்லியம்மன் கோயில் திருவிழா

கந்தா்வகோட்டை ஒன்றியம், சுந்தம்பட்டி ஊராட்சியில் உள்ள செல்லியம்மன் கோயில் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. முறைப்படியான அறிவிப்பு மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய கோயில் திருவிழா நாள்தோறும் ஒவ்வொர... மேலும் பார்க்க

ரூ. 53 கோடியில் கட்டப்பட்ட 576 அடுக்குமாடி வீடுகள் திறப்பு

புதுக்கோட்டையில் கவிநாடு மேற்கு மற்றும் போஸ் நகா் பகுதிகளில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ. 53.44 கோடியில் கட்டப்பட்ட 576 அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளை சென்னையிலிருந்... மேலும் பார்க்க

அறந்தாங்கி நகராட்சி வளாகத்தில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்தும் மாதந்தோறும் 7-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வலியுறுத்தியும் சிஐடியு தொழிற... மேலும் பார்க்க