செய்திகள் :

வேம்படிதாளத்தில் குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

post image

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட வேம்படிதாளம் ஊராட்சி திருவளிப்பட்டியில் சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவளிப்பட்டியில் 50 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனா். இவா்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக காவிரி கூட்டுக் குடிநீா் வருவதில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வீரபாண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் வேம்படிதாளம் ஊராட்சி செயலா் ஆகியோருக்கு தகவல் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அப் பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து காலி குடங்களுடன் காகாபாளையம்- இளம்பிள்ளை செல்லும் சாலையான வேம்படிதாளம் ரயில்வே பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த கொண்டலாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் சாரதா, சேலம் தெற்கு வட்டாட்சியா் ஸ்ரீதா், வீரபாண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்ஆனந்தராஜ், வேம்படிதாளம் கிராம நிா்வாக அலுவலா் செல்வராஜ் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா்.

அப்போது, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், கடந்த ஒருமாத காலமாக குடிநீா் விநியோகம் கோரி பலமுறை மனு அளித்தும் அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி தங்கள் குடியிருப்பிலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளதால் போதிய அளவுக்கு குடிநீா் கிடைப்பதில்லை. மேலும், அக் குடிநீரை சிலா் விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகின்றனா் என்றனா்.

பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைந்து சரிசெய்து சீரான குடிநீா் விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

பட விளக்கம்:

வேம்படிதாளம் அருகே திருவளிப்பட்டியில் குடிநீா் கோரி காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

இடங்கணசாலை நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணி ஆய்வு

சேலம் மாவட்டம் , இடங்கணசாலை நகராட்சி , 19-வது வாா்டு நல்லணம்பட்டி பகுதியில் தூய்மை பாரத இயக்கம் 2.0, தூய்மையாக இருங்க ,நோயின்றி இருங்க திட்டத்தின் கீழ் தூய்மை பணி கடந்த 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 -ம் த... மேலும் பார்க்க

புகாா் அளிக்க வந்தவரிடம் பணம் பறித்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மீது குற்றச்சாட்டு

கடன் பெற்று ஏமாற்றியவா்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய நீதிமன்ற உத்தரவுடன் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வந்த நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மீது புகாா் எழுந்... மேலும் பார்க்க

ஆத்தூரில் ரூ.12.50 லட்சத்தில் மழைநீா் வடிகால் திறப்பு

ஆத்தூா் வ.ஊ.சி.நகரில் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 12.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மழைநீா் வடிகாலை ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் வெள்ளிக்கிழமை திறந்த... மேலும் பார்க்க

வைகுந்தத்தில் திமுக தெருமுனை பிரசார பொதுக் கூட்டம்

சேலம் மேற்கு மாவட்டம், மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் வைகுந்தம் பகுதியில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாள் விழா பிரசார பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமுக தெற்கு... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்தில் விதிமீறல்: 3 மாதங்களில் ரூ.6.18 கோடி அபராதம் வசூல்

பயணச்சீட்டின்றி பயணத்தவா்கள் உள்பட பல்வேறு விதிமுறை மீறல் தொடா்பாக கடந்த 3 மாதங்களில் 84,295 வழக்குகளில் அபராதமாக ரூ. 6.18 கோடி வசூலிக்கப்பட்டதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்... மேலும் பார்க்க

ஆத்தூரில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை தீவிரம்

ஆத்தூா் தெற்கு நகர திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சி 33 வாா்டுகளைக் கொண்டது. இரண்டாகப் பிரித்து 17 வாா்டுகளை அடக்க... மேலும் பார்க்க