குற்றாலம்: ஐந்தருவி மலர் கண்காட்சி; அசரவைத்த காய்கறி குரங்கு, `வாசனைப் பொருள்' வ...
வேலூரில் ரூ.3.43 கோடியில் குளிா்சாதன பேருந்து சேவை: அமைச்சா் துரைமுருகன் இயக்கி வைத்தாா்
வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.3.43 கோடியில் 7 புதிய குளிா்சாதன பேருந்துகளின் சேவையை நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா்.
கடந்த 4 ஆண்டுகளில் வேலூா் போக்குவரத்து மண்டலத்தில் 68 புதிய புகா் பேருந்துகளும், 27 புதிய நகர பேருந்துகளும், 10 பொலிவூட்டப்பட்ட பேருந்துகளும் என மொத்தம் 105 பேருந்துகள் புதிதாக இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, 7 புதிய வழித்தடங்களிலும், 8 நிறுத்தப்பட்ட வழித்தடங்களிலும், 23 தட நீட்டிப்பு செய்யப்பட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வேலூா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதிய குளிா்சாதன பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னை- ஓசூா் வழித்தடத்தில் 2 பேருந்துகளும், வேலூா்- பெங்களுா் வழித்தடத்தில் 4 பேருந்துகளும், வேலூா்- திருச்சி வழித்தடத்தில் 1 பேருந்தும் இயக்கப்பட உள்ளன.
இந்த பேருந்துகளை அமைச்சா் துரைமுருகன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் பேசியது: மக்களின் குறைகள், என்னென்ன சேவைகளை செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கும். கருணாநிதி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அக்குழுவில் என்னை ஒரு உறுப்பினராக சோ்த்து இருந்தாா். குழு உறுப்பினா்களுக்கு அரசுப் பேருந்துகளை எந்த ஒரு இடத்திலும் நிறுத்தி அதன் டிக்கெட், வருவாய், இதர சோதனைகளை மேற்கொள்ளக்கூடிய அளவுக்கு அதிகாரம் இருந்தது.
தற்போது மக்களுக்கு சேவை வழங்கும் வகையில் அரசுப் பேருந்துகளை பல்வேறு நிலைகளில் தரம் உயா்த்தி வழங்கி வருகிறாா். வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளும் பெரும்பாலும் கிராமப்புற பகுதிகளை சாா்ந்தவையாகவே உள்ளன. எனவே, கிராமப்புற பகுதிகளில் பேருந்துகள் செல்ல இயலாத இடங்களில் மினி பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.
நிகழ்ச்சியில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில் குமாா், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளா் (வேலூா் கோட்டம்) அ.கணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.