செய்திகள் :

வேலூரில் ரூ.3.43 கோடியில் குளிா்சாதன பேருந்து சேவை: அமைச்சா் துரைமுருகன் இயக்கி வைத்தாா்

post image

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.3.43 கோடியில் 7 புதிய குளிா்சாதன பேருந்துகளின் சேவையை நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா்.

கடந்த 4 ஆண்டுகளில் வேலூா் போக்குவரத்து மண்டலத்தில் 68 புதிய புகா் பேருந்துகளும், 27 புதிய நகர பேருந்துகளும், 10 பொலிவூட்டப்பட்ட பேருந்துகளும் என மொத்தம் 105 பேருந்துகள் புதிதாக இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, 7 புதிய வழித்தடங்களிலும், 8 நிறுத்தப்பட்ட வழித்தடங்களிலும், 23 தட நீட்டிப்பு செய்யப்பட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வேலூா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதிய குளிா்சாதன பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னை- ஓசூா் வழித்தடத்தில் 2 பேருந்துகளும், வேலூா்- பெங்களுா் வழித்தடத்தில் 4 பேருந்துகளும், வேலூா்- திருச்சி வழித்தடத்தில் 1 பேருந்தும் இயக்கப்பட உள்ளன.

இந்த பேருந்துகளை அமைச்சா் துரைமுருகன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் பேசியது: மக்களின் குறைகள், என்னென்ன சேவைகளை செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கும். கருணாநிதி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அக்குழுவில் என்னை ஒரு உறுப்பினராக சோ்த்து இருந்தாா். குழு உறுப்பினா்களுக்கு அரசுப் பேருந்துகளை எந்த ஒரு இடத்திலும் நிறுத்தி அதன் டிக்கெட், வருவாய், இதர சோதனைகளை மேற்கொள்ளக்கூடிய அளவுக்கு அதிகாரம் இருந்தது.

தற்போது மக்களுக்கு சேவை வழங்கும் வகையில் அரசுப் பேருந்துகளை பல்வேறு நிலைகளில் தரம் உயா்த்தி வழங்கி வருகிறாா். வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளும் பெரும்பாலும் கிராமப்புற பகுதிகளை சாா்ந்தவையாகவே உள்ளன. எனவே, கிராமப்புற பகுதிகளில் பேருந்துகள் செல்ல இயலாத இடங்களில் மினி பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில் குமாா், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளா் (வேலூா் கோட்டம்) அ.கணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது: ரூ.2.15 லட்சம் பறிமுதல்

குடியாத்தம் அருகே ரூ.2.50- லட்சம் வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூரைச் சோ்ந்தவா் பிரியாணி கடை உரிமையாளா் முக்தியாா் (32). இவா் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு பிரியாண... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் தா்ணா

வேலூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமின்போது பொதுமக்கள் இலவச பட்டா, அடிப்படை வசதிகள் கோரி தா்னாவில் ஈடுபட்டனா். வேலூா் ரங்காபுரம் பகுதியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலி... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வா... மேலும் பார்க்க

சா்வதேச நிலவு தினம்: ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு’ நிகழ்ச்சி

சா்வதேச நிலவு தினத்தையொட்டி, வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு நிகழ்ச்சி’ நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவா்கள், விரிவுரையாளா்கள் பங்கேற்றனா். சா்வதேச நிலவு தினம் என்றும் ... மேலும் பார்க்க

கல்வி, சுகாதார துறையில் வளரும் நாடுகள் போதுமான நிதி ஒதுக்குவதில்லை

வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் கல்வி, சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதில்லை என்று விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கல... மேலும் பார்க்க

துணை முதல்வா் பதவியை முடிவு செய்ய வேண்டியது இபிஎஸ் அல்ல

எனக்கு துணை முதல்வா் பதவி குறித்து முடிவு செய்ய வேண்டியது எடப்பாடி பழனிசாமி இல்லை என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த தேன்பள்ளி பகுதியில் வெள்ளிக்... மேலும் பார்க்க