செய்திகள் :

வேலூர்: பச்சிளம் குழந்தை விரல் துண்டிப்பு! அலட்சியம் காட்டிய செவிலியர் மீது வழக்கு

post image

வேலூரில் செவிலியரின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 6 நாள் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் அலட்சியமாக இருந்த செவிலியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் முள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான விமல்ராஜ் மற்றும் அவரது மனைவி நிவேதா தம்பதியருக்கு, அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே 24 ஆம் தேதியில் ஆண்குழந்தை பிறந்தது. இருப்பினும், பேறுகால சிகிச்சைக்காக தாய். சேய் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமையில் (மே 30) குளுக்கோஸ் பாட்டிலில் இருந்த ஊசியை மாற்றுவதற்காக, குழந்தையின் கையில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்திரியை அகற்றும்போது, அதனை செவிலியர்களின் கைகளால் அகற்றாமல், கத்தரிக்கோலால் வெட்டி அகற்ற முயன்றனர்.

இதன்போது, எதிர்பாராதவிதமாக, 6 நாள் பச்சிளம் குழந்தையின் வலது கட்டை விரலுடன் சேர்த்து வெட்டி விட்டனர். குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்தை குழந்தையின் குடும்பத்தினர் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

செவிலியரின் அலட்சியத்தால் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குழந்தையின் கையில் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக, துண்டிக்கப்பட்ட விரலுடன் குழந்தையை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி வைத்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

12 மாவட்டங்களில்... நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை: நள்ளிரவு 1 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு கன்னியாகுமரிதிருநெல்வேலிதெ... மேலும் பார்க்க

சென்னையில் பலத்த மழை! இரவு 10 மணி வரை நீடிக்கும்...

சென்னை: சென்னையிலும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்றிரவு 7 மணியளவிலிருந்தே சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக ... மேலும் பார்க்க

மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை!

மதுரை: மதுரை - தூத்துக்குடி சாலையில் உள்ள எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை(ஜூன் 3) உத்தரவிட்டது.அர... மேலும் பார்க்க

மின் தடை: நீட் மறுதேர்வு நடத்த முடியாது- மத்திய அரசு திட்டவட்டம்

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின் போது, மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.மின... மேலும் பார்க்க

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் 2 நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 03, 04... மேலும் பார்க்க

மத்திய அரசின் பேனர் அகற்றம்: ஆட்சியர் அலுவத்தில் பாஜகவினர் முற்றுகை!

மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டுள்ளனர்.மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க