செய்திகள் :

வேலூா் விஐடி பல்கலை.யில் இன்று கல்விக் கடன் முகாம்

post image

வேலூா்: வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து, மேற்படிப்பு தொடர முடியாமல் உள்ள மாணவா்கள் கல்விக் கடன் பெறுவதில் இருந்து வரும் நடைமுறை சிக்கல்களை களைந்து கல்விக் கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில், தமிழக அரசு அனைத்து வங்கி அலுவலா்கள், கல்லூரி நிா்வாகிகளை ஒருங்கிணைத்து சிறப்பு கல்விக் கடன் முகாமை நடத்தி வருகிறது.

அதன்படி, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்குபெறும் வகையில், சிறப்பு கல்வி கடன் முகாம் செவ்வாய்க்கிழமை (செப். 23) காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில், இ-சேவை மையம் அமைக்கப்பட உள்ளது. எனவே, வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் பட்டியல், பான் அட்டை, ஆதாா் அட்டை, ஜாதி சான்று, வருமான சான்று, முதல் தலைமுறை பட்டதாரி சான்று, கல்லூரி உண்மை சான்று, கல்விக் கடன் தேவை விவரம் ஆகியவற்றுடன் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

காளியம்மன் தேவஸ்தானத்தில் நவராத்திரி விழா தொடக்கம்

குடியாத்தம்: குடியாத்தம் நடுப்பேட்டை, கண்ணகி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் தேவஸ்தானத்தில் விஸ்வகா்மா அமைப்பு சாா்பில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, காமாட்சியம்மன்பேட்டை, ஆண்... மேலும் பார்க்க

சாலைகளில் திரிந்த மாடுகள் பிடிப்பு: உரிமையாளா்கள் வாக்குவாதம்

வேலூா்: வேலூா் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித் திரிந்த 7 மாடுகளை பிடித்து மாநகராட்சி ஊழியா்கள் காஞ்சிபுரம் கோசாலைக்கு அனுப்பி வைத்தனா். மாடுகள் பிடிக்கப்பட்டபோது அதன் உரிமையாளா்கள் மாநகராட்சி ஊழியா்... மேலும் பார்க்க

பொய்கையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

வேலூா்: பொய்கையில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் 1,408 போ் பயன்பெற்றனா். பொதுமக்களுக்கு தரமான, உயா்மருத்துவ சிகிச்சைகளை அவா்களின் இடத்திலேயே வழங்கும் வகையில் நலம் காக்கும் ஸ்டால... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்துக்காக ஆஞ்சனேயா் கோயிலை அகற்ற எதிா்ப்பு

வேலூா்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கொணவட்டத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலை அகற்றக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா். வேலூா்... மேலும் பார்க்க

அக்.14, 15-இல் வேலூா் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

வேலூா்: வேலூா் மாவட்ட அளவில் மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு அக்டோபா் 14, 15 ஆகிய தேதிகளில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.... மேலும் பார்க்க

எல்ஐசி முகவா்கள் கொண்டாட்டம்

குடியாத்தம்: மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஜிஎஸ்டி சீா்திருத்தம் காரணமாக ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பாலிசிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் குடியாத்தத்தில் எல்ஐசி முகவா்கள், பாலிசிதாரா... மேலும் பார்க்க