செய்திகள் :

வைஷ்ணவி தேவி கோயில் செல்லும் பாதையில் நிலச்சரிவு: 10 பேர் காயம்!

post image

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பழைய பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 5 பக்தர்கள் உள்பட 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திரிகுடா மலைகளில் உள்ள சன்னதிக்கு வருகைதரும் பக்தர்களுக்கான அடிப்படை முகாமான கத்ரா நகரத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் முன்பதிவு அலுவலகம் மற்றும் மேல்நிலை இரும்பு அமைப்பு இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்ல பிற்பகல் 1 மணி பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பங்கங்கா அருகே உள்ள குல்ஷன் கா லங்காரில் காலை 8.30 மணியளவில் நடந்தது. பக்தர்கள் நகரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள குகைக் கோயிலுக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு பெரும்பாலும் குதிரை சவாரி செய்பவர்கள் பழைய பாதையில் ஒன்றுகூடிப் பதிவு செய்கிறார்கள்.

நிலச்சரிவில் மூன்று பேர் படுகாயமடைந்தனர், மேலும் ஏழு பேர் லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று மாதா வைஷ்ணவி தேவி ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சச்சின் குமார் வைஷ்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜம்மு மாவட்ட நீதிபதி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முழு அளவிலான மீட்பு மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகக் கூறினார்.

உள்ளூர் தன்னார்வலர்கள், ஆலய வாரிய ஊழியர்கள், எஸ்டிஆர்எஃப், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் பணியாளர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையைச் சேர்ந்த உப்பன் (70), அவரது மனைவி கே. ராதா (66), ஹரியாணாவைச் சேர்ந்த ராஜிந்தர் பல்லா (70) ஆகியோர் நாராயண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அதே நேரத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த லீலா ராய்க்வர் (56) கட்ரா சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வானிலை ஆய்வுத் துறையின் கூற்றுப்படி, இன்று காலை 8.30 நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் கத்ரா நகரில் 184.2 மிமீ மழை பதிவாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஹிம்கோட்டி அருகே மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டதால் புதிய பாதை தடைப்பட்டுள்ளது, அதைச் சரிசெய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

A massive landslide struck the old track to the Vaishno Devi shrine in Reasi district of Jammu and Kashmir on Monday, leaving at least 10 persons including five pilgrims, injured, officials said.

இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர்: நாட்டின் ராணுவ வலிமையை உலக நாடுகளே வியந்தன - பிரதமர் மோடி

பதவிக்காலம் முடிவதற்குள் குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா: அடுத்து என்ன நடக்கும்?

குடியரசு துணைத் தலைவர் பதவி வகித்த ஜகதீப் தன்கர் பதவிக்காலம் முடிவதற்குள் ராஜிநாமா செய்துள்ளார்.‘குடியரசு துணைத் தலைவர்' என்னும் இந்திய அரசமைப்பின் இரண்டாவது பெரிய பதவியிலிருக்கும் ஒருவர் தமது பதவிக்க... மேலும் பார்க்க

‘ஏழைகளின் போராளி அச்சுதானந்தன்' - ராகுல் காந்தி இரங்கல்!

கேரள முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான வி. எஸ். அச்சுதானந்தன் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ... மேலும் பார்க்க

போர் விமான விபத்து: வங்கதேசத்துக்கு உதவத் தயார் - பிரதமர் மோடி

வங்க தேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளான விவகாரத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பயிற்சியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜிநாமா!

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பார்க்க

முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு: கேரளத்தில் நாளை பொது விடுமுறை!

முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன் மறைவையொட்டி, கேரளத்தில் 3 நாள்களுக்கு அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. திருவனந்தபுரத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி. எஸ். அச்சுதானந்த... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக அவையின் தலைவர் ஜகதீப் தன்கர் இன்று (ஜூலை 21) தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடி... மேலும் பார்க்க