செய்திகள் :

`ஸ்கூட்டி ரூ. 1 லட்சம், நம்பர் ரூ. 14 லட்சம்' - ஏலத்தில் போட்டிபோட்டு வாங்கிய இமாச்சல் நபர்

post image

இமாச்சலப்பிரதேசத்தில் ஒருவர் ரூ. 1 லட்சத்துக்கு ஸ்கூட்டி வாங்கி, அதற்கு போக்குவரத்துத் துறையில் ரூ. 14 லட்சத்துக்கு விஐபி நம்பர் வாங்கியது பேசுபொருளாகியிருக்கிறது.

இதில், சோலன் மாவட்டதிலுள்ள பட்டியைச் சேர்ந்த ஒருவரும், சஞ்சீவ் குமார் என்பவரும் தங்களின் இரு சக்கர வாகனத்துக்கு HP21C-0001 ஒரே எண் வேண்டுமென்று போக்குவரத்துத் துறையில் கேட்டிருக்கின்றனர்.

இதனால், போக்குவரத்துத் துறை இவ்விருவருக்கும் ஆன்லைனில் ஏலம் நடத்தியது.

ஸ்கூட்டி
ஸ்கூட்டி

ஏலத்தில் சோலன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரூ. 13.5 லட்சம் வரை செல்ல, சஞ்சீவ் குமார் அதைவிட அதிகமாக குமார் ரூ. 14 லட்சத்துக்கு சென்றார்.

அந்த நபர் மேற்கொண்டு ஏலம் கேட்காததால் HP21C-0001 எண் சஞ்சீவ் குமாருக்கே வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, இந்த முழுத்தொகையும் மாநில அரசின் கருவூலத்தில் டெபாசிட் செய்யப்பட்டது.

மேலும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, மாநிலத்தில் இரு சக்கர வாகனத்திற்கு வழங்கப்பட்ட மிக விலையுயர்ந்த பதிவு எண்ணாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பணம்
பணம்

பின்னர், தனித்துவமான எண்களைச் சேகரிப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாகத் தெரிவித்த சஞ்சீவ் குமார், "ஆர்வத்துக்கு எந்த விலையும் இல்லை. ஏதேனும் ஒன்றை நீங்கள் மிகவும் விரும்பும்போது அதன் விலையை நீங்கள் பார்க்க மாட்டீர்கள்" எனக் கூறினார்.

மேலும், அவரின் மகன் தினேஷ் குமார், "நாங்கள் அந்த எண்ணுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தோம். மற்றொரு நபரும் அதே நம்பரைக் கேட்டிருந்தார். இறுதியில், ஏலத்தின் மூலம் எங்களுக்கு அந்த எண் ஒதுக்கப்பட்டது" என்றார்.

ஒரே சமயத்தில் தேர்வெழுதிய தந்தை, மகன் போலீஸ் வேலைக்கு தேர்வு.. ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு!

படிப்புக்கும், வேலைக்கும் வயது ஒரு தடை கிடையாது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் பார்த்து வருகிறோம்.உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகில் உள்ள உதயராம்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் யஷ்பால் சிங்(41).... மேலும் பார்க்க

ஹைதராபாத் மேம்பாலத்தில் ஓட்டமெடுத்த ஒட்டகம்; சவாரியில் சிக்கிய இளைஞரை மீட்ட சம்பவம்.. வைரல் காட்சி!

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான மேம்பாலத்தில், ஒருவர் ஒட்டகத்தின் மீது ஆபத்தான முறையில் சவாரி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தின் பி.வி. நரசிம்மராவ் விரைவுச் சாலையில் இந்த சம்பவம் நடந... மேலும் பார்க்க

``திருமணத்திற்கு வராத விருந்தினர்களுக்கு ரூ.4,339 அபராதம்'' - மணமகள் சொல்வது என்ன? வைரலாகும் பதிவு

திருமணம் என்றாலே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். கேட்டரிங் முதல் டெக்கரேஷன் வரை திருமண நிகழ்விற்காக ஒரு பெரிய தொகையை செலவிடுவார்கள்.குறிப்பாக விருந்தினர்களின் எண்ணிக்கை பொறுத்து உணவுகள் ஏற்பாடு செ... மேலும் பார்க்க

Telegram: ``நான் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அப்பா'' - டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பிரெஞ்சு பத்திரிகையான லு பாயிண்டி செய்தியிடம் அளித்த பேட்டியி... மேலும் பார்க்க

Iran Vs Israel: ``அணு ஆயுதம் தயாரிக்கும் உலை மீது குண்டு விழுந்தால் என்னவாகும்?'' - ஓர் அலசல்!

ஈரானிலும் - இஸ்ரேலிலும் தொடர்ந்து குண்டுமழைப் பொழிகிறது. இதில் அதிகளவில் பாதிக்கப்படுவது இருதரப்பிலிருந்தும் அப்பாவி மக்கள்தான். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என எந்த நாடும் பேச்சுவார்த்த... மேலும் பார்க்க

``ரூ.7500 சாம்சங் போனில் ஆரம்பித்தேன்; இப்போ பிசினஸ் ஸ்டார்..'' - சாதித்து காட்டிய தன்னம்பிக்கை பெண்

இணையதளம் வருமானம் ஈட்டுவதற்கான பல வழிகளையும் திறந்துவிட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இப்போதெல்லாம் பலரும் யூடியூப் சேனலைத் தொடங்கி விதவிதமாக வீடியோக்களை தயாரித்து சம்பாதித்து வருகின்றனர். அந்தவகையில... மேலும் பார்க்க