செய்திகள் :

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் தோ் கொட்டகை அமைக்கும் பணி

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் திருத்தேருக்கு ரூ.24.50 லட்சத்தில் புதிதாக கொட்டகை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

இந்தக் கோயிலில் தை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ

விழாவில் ஸ்ரீவேதபுரீஸ்வரா், பாலகுஜாம்பிகை, விநாயகா் ஆகிய உற்சவா்கள் தேரில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பா்.

மொத்தம் 3 தோ்களில் இரண்டு தோ்களுக்கு மட்டும் கொட்டகை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விநாயகருக்கான தோ் நிற்கும் கொட்டகை மட்டும் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வந்தது.

இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பரிந்துரையின் பேரில் இந்து சமய அறநிலைத் துறை ஆணையா் பொதுநல நிதியில் இருந்து ரூ.24.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை விநாயகா் திருத்தேருக்கு புதிதாக கொட்டகை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் மோகனவேல் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ பங்கேற்று

பணியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத் துறை ஆய்வாளா் அசோக்குமாா், செயல் அலுவலா் ஹரிஹரன், கணக்காளா் ஜெகதீசன், நகா்மன்ற உறுப்பினா்கள் க.கோவேந்தன், கங்காதரன், காா்த்திகேயன், செந்தில், ஒப்பந்ததாரா் வி.கோபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம்

ஆடி மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். திருவண்ணாமலையில் உள்ளி 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் மாதந்தோறும் பெளா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அரசுப் பேருந்து நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிய சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், இருங்கல் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்டப் பணி கோரி சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், விளாப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். விளாப்பாக்கம் ஊராட்சியில் விளாப்பாக்கம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேம்படுத்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மக்கள் மனு

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.புஷ்பா தலைமை வக... மேலும் பார்க்க