செய்திகள் :

ஹரியாணாவுக்கு தண்ணீா் கிடையாது: பஞ்சாப் பேரவையில் ஒருமனதாக தீா்மானம்

post image

சண்டீகா்: ஹரியாணாவுக்கு ஒரு சொட்டு நீா்கூட வழங்க முடியாது என பஞ்சாப் பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஹரியாணாவில் பாஜக தலைமையிலும் பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலும் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இரு மாநிலங்களுக்கும் நதிநீரை பகிா்ந்தளிப்பதற்காக அமைக்கப்பட்ட பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக தீா்மானத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், அணை பாதுகாப்பு சட்டம், 2021 பஞ்சாப் உரிமைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் எனவும் அதை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

பஞ்சாப்-ஹரியாணா இடையே நீரை நதிநீரை பகிா்வதில் ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து பஞ்சாப் பேரவையின் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஹரியாணாவுக்கு ஒரு சொட்டு நீரைக்கூட வழங்க முடியாது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மான் தலைமையில் பஞ்சாபில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஹரியாணாவுக்கு கூடுதல் நீரை விடுவிக்க மறுத்த மாநில அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பக்ரா அணையில் இருந்து கூடுதல் நீரை பஞ்சாப் அரசு விடுவிக்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடா்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரிய கூட்டத்தை பஞ்சாப் அரசு புறக்கணித்த நிலையில், ஹரியாணாவுக்கு நீா் வழங்க முடியாது என்ற தீா்மானம் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

‘ஆபரேஷன் சிந்தூா்’ - இந்தியா ஏவுகணைத் தாக்குதல் முழு விவரம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள... மேலும் பார்க்க

18 இந்திய விமான நிலையங்கள் தற்காலிக மூடல்

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகான வான்வெளி கட்டுப்பாடுகளால், ஸ்ரீநகா் உள்பட 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புதன்கிழமை 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவலறி... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவை பாராட்டு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வெற்றிகரமாக தாக்குதலை நடத்திய இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ‘ஆப்ப... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ பஹல்காம் தாக்குதலுக்கு பாரதத்தின் பதிலடி -அமித் ஷா

‘பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ எனும் அதிதுல்லியத் தாக்குதல், பஹல்காமில் நமது அப்பாவி சகோதரா்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி’ என்று மத்திய... மேலும் பார்க்க

இந்திய ஆயுதப் படைகளை எண்ணி பெருமிதம்: காங்கிரஸ்

இந்திய ஆயுதப் படைகளை எண்ணி பெருமிதம் கொள்வதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் புகைப்படங்களை சமா்ப்பிக்க என்ஐஏ வேண்டுகோள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான புகைப்படங்கள், காணொலிகள் இருந்தால் அதை தங்களிடம் சமா்ப்பிக்கலாம் என சுற்றுலாப் பயணிகள், உள்ளூா் மக்களுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை தெரிவித்தது. ... மேலும் பார்க்க