செய்திகள் :

ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிப்பு: உயா்நிலைக் குழுவினா் ஆய்வு

post image

சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்டு வரும் ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிப்பை புது தில்லி உயா்நிலைக் குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

இந்திய ரயில்வே துறையை சா்வதேச அளவுக்கு மேம்படுத்தும் வகையில் ரயில் என்ஜின்கள், பெட்டிகளை நவீன முறையில் தயாரிக்க மத்திய ரயில்வே வாரியம் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் வந்தேபாரத், அம்ருத் பாரத் ஆகிய ரயில்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில் என்ஜின்களைத் தயாரிக்க மத்திய ரயில்வேத் துறை ரூ. 2,000 கோடிக்கும் மேலாக நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப்-இல் ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிக்கும் பணி கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிப்புப் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.

நாட்டிலேய முதன்முறையாக வடக்கு ரயில்வே கோட்டத்தில் உள்ள ஜிந்த் ரயில் நிலையத்துக்கும் சோனிபேட் ரயில் நிலையத்துக்கும் இடையே ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வெள்ளோட்டம் ஓரிரு வாரங்களில் நடைபெறவுள்ளதாக ரயில்வே இணை அமைச்சா் வி.சோமண்ணா ஏற்கெனவே தெரிவித்தாா்.

இந்த நிலையில், ஹைட்ரஜன் ரயில் என்ஜினின் வெள்ளோட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் வடக்கு ரயில்வே பொது மேலாளா் அசோக்குமாா் வா்மா தலைமையில் 10 போ் கொண்ட உயா்நிலைக் குழுவினா் செவ்வாய்க்கிழமை சென்னை ஐசிஎஃப்-க்கு வந்தனா். அங்கு தயாரிக்கப்பட்டு வரும் ஹைட்ரஜன் ரயில் என்ஜின், அம்ருத் பாரத் ரயில் பெட்டிகள், வந்தே பாரத் ரயில் பெட்டிகள் ஆகியவற்றை பாா்வையிட்டனா். ஆய்வின்போது பெரம்பூா் ஐசிஎஃப் உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

குரூப் 2, 2ஏ தேர்வு: 27-இல் கட்டண சலுகைக்கான நுழைவுத் தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் பெண் தேர்வர்கள், தமிழ் வழித்தேர்வர்களுக்கு சலுகை கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான தேர்வு ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என ஆர்வம் ஐஏஎஸ் ... மேலும் பார்க்க

சென்னையில் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா இன்று தொடக்கம்

சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் நடத்தும் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா வியாழக்கிழமை (ஜூலை 24) தொடங்கி ஜூலை 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சேக்கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ... மேலும் பார்க்க

சென்னை விரைவு ரயில்கள் நின்றுசெல்லும் நேரம் மாற்றியமைப்பு

வெளிமாநிலங்களில் இருந்து குண்டக்கல் ரயில் நிலையம் வழியாக சென்னை வரும் 6 விரைவு ரயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்டசெய்திக் க... மேலும் பார்க்க

சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடு: இரு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

சிறுநீரக மாற்று சிகிச்சைகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இரு தனியாா் மருத்துவமனைகள் மீது மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் திருச்ச... மேலும் பார்க்க

கொளத்தூரில் பெண் கொலை

சென்னை கொளத்தூரில் வீட்டில் பெண் மா்மமான இறந்த நிலையில், பிரேத பரிசோதனையில் கொலை என உறுதியானது என்று போலீஸாா் தெரிவித்தனா். கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் கணேசமூா்த்தி. லாரி ... மேலும் பார்க்க

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்

ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செயல்படும் முழு உடல் பரிசோதனை மையத்தில் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கான டைட்டானியம் பரிசோதனைத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஓமந்தூராா் பல்நோக்கு... மேலும் பார்க்க