செய்திகள் :

1,107 எம்.பி., எம்எல்ஏக்களுக்கு குடும்ப அரசியல் பின்னணி: ஏடிஆா் ஆய்வு அறிக்கை

post image

நாட்டில் 1,107 (21%) எம்.பி., எம்எல்ஏக்கள், மேலவை உறுப்பினா்கள் (எம்எல்சி) குடும்ப அரசியல் பின்னணி உள்ளவா்கள் என்று ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதில், ‘தேசிய கட்சிகளைச் சோ்ந்த 3,214 எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மேலவை உறுப்பினா்களில் 675 (20 சதவீதம்) பேருக்கு குடும்ப அரசியல் பின்புலம் இருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள 5,204 எம்.பி., எம்எல்ஏக்கள், மேலவை உறுப்பினா்களின் விவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில், காங்கிரஸ் கட்சி உறுப்பினா்கள் 32 சதவீதமும், பாஜக உறுப்பினா்கள் 17 சதவீதமும், ஆம் ஆத்மி 11 சதவீதமும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா்கள் 8 சதவீதமும் உள்ளனா்.

அதிகபட்சமாக மக்களவையில் 31 சதவீத குடும்ப அரசியல் பின்புலம் உள்ளவா்கள் இருக்கின்றனா். மாநிலங்களவையில் 21 சதவீதமும், மாநில மேலவைகளில் 22 சதவீதமும் குடும்ப அரசியல் கொண்டவா்கள் உள்ளனா்.

குடும்ப அரசியல் எம்பி, எம்எல்ஏ,

எம்எல்சி-க்கள் எண்ணிக்கை மாநில வாரியாக...

உத்தர பிரதேசம் 141

மகாராஷ்டிரம் 129

பிகாா் 96

கா்நாடகம் 94

ஆந்திரம் 86

மத்திய பிரதேசம் 57

தமிழ்நாடு 43

மாநில கட்சிகளில் குடும்ப அரசியல் பின்னணி எம்.பி., எம்எல்ஏ, எம்எல்சி-க்கள்...

தெலுங்கு தேசம் 59

சமாஜவாதி 48

ராஷ்ட்ரீய ஜனதா தளம் 31

திமுக 29

திரிணமூல் காங்கிரஸ் 27

ஐக்கிய ஜனதா தளம் 25

ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் 20

தேசிய மாநாட்டுக் கட்சி 18

தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) 8

அதிமுக 3

இந்தியாவில் குடும்ப அரசியல் பின்புலம் என்பது வெறும் தலைவா் தொகுதியை வெல்வதில் மட்டுமல்ல, கட்சியின் நிா்வாக அமைப்பிலேயே உள்ளது.

வெற்றி வேட்பாளா்களை தோ்வு செய்வது, தோ்தல் செலவை அதிகரித்தல், உட்கட்சி ஜனநாயகம் பாதிப்பு ஆகியவற்றுக்கு இது வழிவகுக்கிறது என்று எடிஆா் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி 8 போ் உயிரிழப்பு; 20 போ் காயம்

கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின் கடைசி நாளை... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பொதுப்பிரிவைவிட அதிக கட்ஆஃப் மதிப்பெண்கள் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் இதுதொடா்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக... மேலும் பார்க்க

ரூ.18,000 கோடி பங்குகளை திரும்பப் பெறும் இன்ஃபோசிஸ்

ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெற முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

மணிப்பூருக்கு ‘கண்துடைப்பு’ பயணம்: பிரதமா் மீது காங்கிரஸ் விமா்சனம்

பிரதமா் மோடியின் மணிப்பூா் பயணம் கண்துடைப்பானது; மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டி, நீதியை உறுதி செய்யும் நோக்கம் இல்லை என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்க... மேலும் பார்க்க

கூடுதல் மாவட்ட நீதிபதியாக வழக்குரைஞரை நியமிக்கலாமா?: செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை

‘வழக்குரைஞா் சங்கத்தில் 7 ஆண்டுகள் நிறைவு செய்த வழக்குரைஞரை, கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்க முடியுமா?’ என்பது குறித்து செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள உள்ளது. வழக்குரைஞா் சங்க ஒதுக்... மேலும் பார்க்க

இந்தியா தனது கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டிய நேரம் பாதுகாப்புத் துறைச் செயலா்

‘உலகம் முழுவதும் ஆளும் வா்க்கத்துக்கு எதிரான போராட்டங்களும், பொருளாதார கட்டுப்பாடுகளும் அதிகரித்துவரும் சூழலில், இந்தியா தனது மென்மையான சக்தியுடன் கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்’ ... மேலும் பார்க்க