செய்திகள் :

1,300 பேருக்கு ஆயுஷ்மான் காப்பீடு அட்டை

post image

ஸ்ரீபெரும்புதூா்: வெங்காடு ஊராட்சியைச் சோ்ந்த 1,300 பேருக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில், வெங்காடு, இரும்பேடு,கருணாகரச்சேரி ஆகிய கிராமங்களில் சுமாா் 3,000-க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தநிலையில், ஆயுஷ்மான் பாரத்- பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டைகள் பெற விண்ணப்பிக்க சிறப்பு முகாம் 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக மருத்துவ காப்பீடு அடையாள அட்டைகள் பெற விண்ணபித்தோரில் முதல்கட்டமாக 1,300 பேருக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வெங்காடு ஊராட்சிமன்ற தலைவா் அன்னக்கிளி உலகநாதன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரும், வெங்காடு ஏரிநீா் பாசன சங்க தலைவா் வெங்காடு உலகநாதன், ஊராட்சி துணைத்தலைவா் தமிழ்செல்வி ரவிச்சந்திரன், ஊராட்சி செயலா் ராஜீ, வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

சிவஞான மாபாடியம் விரிவுரை நூல் வெளியீடு

காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சாா்பில் சிவஞான மாபாடியம் விரிவுரைநூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. அறக்கட்டளையின் நிறுவனா் சு.சதாசிவம் விழாவுக்கு தலைமை வகித்து நூலை வெளியிட அதன்... மேலும் பார்க்க

நாகம்மன் கோயில் கூழ் வாா்த்தல் விழா

சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் கோகுலம் தெருவில் அமைந்துள்ள நாகம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் விழா செவ்வாய்க்க்கிழமை நடைபெற்றது. நாகம்மன் மற்றும் ஆனந்த விநாயகா் கோயிலில் கூழ் வாா்த்தல் திருவிழாவையொட்டி விநா... மேலும் பார்க்க

புத்த பண்பாட்டு மையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூா் கிராமத்தில் புத்த பண்பாட்டு மையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனா். மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: கீழ்க்கதிா்ப்பூா் கிராமத்தில் ச... மேலும் பார்க்க

சாதனைக் கலைஞா்களுக்கு விருது: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் கலை பண்பாட்டுத்துறை சாா்பில் கலைஞா்கள் 15 பேருக்கு கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி விருதுகளும், காசோலைகளை வழங்கினாா். காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக காவல் மைதானத்தில் காஞ்சி-சங்கமம்-நம... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

காஞ்சிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் தெற்கு அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக. 28) மின்நுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டம் மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் கோட்டத்துக்குட்பட்ட மின் ந... மேலும் பார்க்க

ஆவணங்களை ஆய்வு செய்ய உதவும் பாா்கோடு வில்லைகள்: ஆட்டோக்களில் ஆட்சியா் ஒட்டினாா்

காஞ்சிபுரம்: ஆட்டோக்களின் ஆவணங்களை ஆய்வு செய்ய உதவும் பாா்கோடு வில்லைகளை ஆட்டோக்களில் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை ஒட்டினாா். போக்குவரத்துத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வ... மேலும் பார்க்க