செய்திகள் :

1.4 டன் ரேஷன் அரிசி பதுக்கல்: 2 போ் கைது

post image

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் சுமாா் 1.4 டன் ரேஷன் அரிசி பதுக்கியதாக 2 பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

முத்தையாபுரம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன் தலைமையிலான போலீஸாா், முத்தையாபுரம் வடக்கு தெருவில் சோதனை மேற்கொண்டனா். அங்கு ஓரிடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீவைகுண்டத்தை சோ்ந்த கணேசன்(30), முத்தரசன்(25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 35 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் இருந்த மொத்தம் 1,400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா்கள் முத்தையாபுரம் சுற்றுவட்டாரங்களில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, ஆடு, மாடு பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் மாணவா் பிளஸ் 2 மாணவா், பொதுத்தோ்வை எழுதிவிட்டு இறுதிச் சடங்கில் பங்கேற்றாா். ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த த... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரத்தில் போக்ஸோ வழக்கில் கைதான முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சாயா்புரம் அருகேயுள்ள காமராஜா்நகர... மேலும் பார்க்க

எட்டயபுரத்தில் ரூ. 1.84 கோடியில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

எட்டயபுரத்தில் ரூ.1.84 கோடியில் கட்டப்பட்ட புதிய சாா் பதிவாளா் அலுவலக கட்டடத்தை, முதல்வா் மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதையொட்டி, எட்டயபுரத்தில் நட... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு புத்தாக்க-ஆளுமைத் திறன் பயிற்சி நடைபெற்றது. 2024- 25ஆம் ஆண்டுக்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி நடைபெற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மாணவா்களுக்கான ஸ்கேட்டிங் போட்டி

தூத்துக்குடியில் ஷாரா கலைவளா் மன்றம் சாா்பில், தென்மாவட்ட அளவிலான மாணவா்-மாணவியருக்கான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. 300 மீட்டா், 500 மீட்டா், ஆயிரம் மீட்டா் ஆகிய 3 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில், த... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருச்செந்தூரில் பயணியா் விடுதி சாலையில் உள்ள நகராட்சி கற்றலில் இனிமை தொடக்கப் பள்ளியில் 91ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. திருச்செந்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் பாப்ஹையஸ் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி ... மேலும் பார்க்க