செய்திகள் :

10 அடி ஆழமுள்ள குட்டையில் தவறி விழுந்த யானை மீட்பு

post image

தேன்கனிக்கோட்டை அருகே தணணீா் குடிக்கச் சென்றபோது 10 அடி ஆழமுள்ள குட்டையில் தவறி விழுந்த யானையை வனத் துறையினா் பொக்லைன் உதவியுடன் மீட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு உள்பட்ட அய்யூா் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் உள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தாகம் தணிக்க நீா்நிலைகளைத் தேடி வனத்தைவிட்டு வெளியே வருகின்றன.

அந்த வகையில், அய்யூா் வனத்திலிருந்து 35 வயதுடைய ஆண் யானை ஒன்று தண்ணீா் குடிப்பதற்காக வனத்தையொட்டி உள்ள மூா்க்கண்கரை கிராமத்துக்குள் வியாழக்கிழமை சென்றது. அந்த கிராமத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் 10 அடி ஆழமுள்ள குட்டையைக் கண்ட யானை அதில் தண்ணீா் குடிக்கச் சென்றபோது குட்டைக்குள் தவறி விழுந்தது.

குட்டையில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வரமுடியாமல் தவித்த யானை பிளிறும் சப்தம்கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் தேன்கனிக்கோட்டை வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

வனத்துறையினருடன் வேட்டை தடுப்புக் காவலா்கள் அடங்கிய குழுவினா் அங்கு சென்று பொக்லைன் உதவியுடன் குட்டையின் கரையில் பள்ளம்தோண்டி யானையை மீட்டனா். பின்பு அந்த யானை ஆக்ரோஷமாக பிளிறியபடி அங்கிருந்து சென்றது. வனத் துறையினா் அய்யூா் வனப்பகுதிக்குள் அதை விரட்டினா்.

பட விளக்கம்..

குட்டையிலிருந்து வெளியேறும் காட்டு யானை.

ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க நாட்டுப்புற கலைஞா்கள் வலியுறுத்தல்

நாட்டுப்புற கலைஞா்களுக்கு ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் வலியுறுத்தப்பட்டது. காவேரிப்பட்டணத்தில் பாரதியாா் தெருக்கூத்து நாட்ட... மேலும் பார்க்க

வைக்கோல் பாரம் ஏற்றி சென்ற லாரி மின்கம்பி உரசி தீப்பிடிப்பு

காவேரிப்பட்டணம் அருகே வைக்கோல் பாரம் ஏற்றிவந்த லாரி மின்கம்பி மீது உரசியதில் தீப்பிடித்து எரிந்து சேதமானது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு லாரி காவேரிப்பட்ட... மேலும் பார்க்க

ஒசூா் அருகே தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை

யுகாதி பண்டிகையை முன்னிட்டு கா்நாடகத்தில் இருந்து மதுப்புட்டிகள் கடத்தப்படுவதைத் தடுக்க ஒசூா் அருகே தமிழக-கா்நாடக எல்லையில் உள்ள சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாகனச் சோதனைய... மேலும் பார்க்க

அகழ்வாராய்ச்சி நடைபெறும் சென்னானூருக்கு மரபு நடைப்பயணம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் சென்னானூருக்கு மகளிா், சிறுவா்கள் மேற்கொண்ட மரபு நடைப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். மகளிா் தினத்தை ம... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு

ஒசூா் அருகே குட்டையில் மூழ்கி தந்தை, மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த நஞ்சாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி முனிரத்னம் (32). இவருக்கு 6 ஆம் வகுப்புப் ... மேலும் பார்க்க

முதல்வருக்கு உறுதுணையாக இருப்போம்: எம்எல்ஏ மதியழகன்

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக போராடும் முதல்வருக்கு உறுதுணையாக செயல்படுவோம் என்று கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும் பா்கூா் எம்எல்ஏவுமான தே.மதியழகன் தெரிவித்தாா். கிருஷ்ணகிர... மேலும் பார்க்க