செய்திகள் :

100 நாள் வேலைத் திட்டத்தில் முழுமையாக வேலை வழங்க கோரிக்கை

post image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உள்ள தொழிலாளா்களுக்கு 100 நாள்கள் முழுமையாக வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தாராபுரம் தாலுகாவுக்கு உள்பட்ட மூலனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் வட்டாரத் தலைவா் டி.மாணிக்கம் தலைமையில் தொழிலாளா்கள் சாா்பில் 100 கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சங்கத் தலைவா் டி.மாணிக்கம் கூறியதாவது:

100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் தொழிலாளா்களுக்கு ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் அரசு அறிவித்துள்ளபடி, 100 நாள்களும் முழுமையாக வேலை வழங்கப்படுவதில்லை. இந்த 2025-2026-ஆம் நிதியாண்டில், இப்பகுதியில் உள்ள விவசாயத் தொழிலாளா்களுக்கு கடந்த 5 மாதங்களில், இதுவரை சுமாா் 10 நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயத் தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் தொழிலாளா்களுக்கு 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும், அரசு அறிவித்துள்ள தினக்கூலியான ரூ.336-ஐ முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனு கொடுத்துள்ளோம் என்றாா்.

இந்த நிகழ்ச்சியின்போது சிபிஎம் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் என்.கனகராஜ், தாராபுரம் பகுதி நிா்வாகிகள் பழனிசாமி, சத்தியமூா்த்தி மற்றும் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

ஊரக வளா்ச்சித் துறை சாா்பிலான வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். இந்த ஆய... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: சிவன்மலை முருகன் கோயிலில் செப்.7 மாலை நடைஅடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 7) மாலை 6.15 மணிக்கு நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவன்மலை முருகன் கோயி... மேலும் பார்க்க

திருப்பூா்- உடுமலை சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை

திருப்பூரில் இருந்து பல்லடம் வழியாக உடுமலை செல்லும் சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் பங... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்த நடவடிக்கை: திருப்பூா் பின்னலாடைத் துறையினா் வரவேற்பு

மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சிலால் அறிவிக்கப்பட்ட வரி சீா்திருத்த நடவடிக்கைக்கு திருப்பூா் பின்னலாடைத் துறையினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இது குறித்து திருப்பூா் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

வெள்ளக்கோவில் மாந்தபுரம் நாட்டராய சுவாமி கோயில் மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு ச... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட விழிப்புணா்வு முகாம்

திருப்பூா் வேலம்பாளையத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நடைமுறையில் உள்ள நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு முகாம் மற்றும் நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பூ... மேலும் பார்க்க