செய்திகள் :

12 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

post image

தமிழக காவல் துறையில் 12 டிஎஸ்பி-க்கள் (துணைக் காவல் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் அடிப்படையில், 12 டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.

இதில் முக்கியமாக நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி வி.இ.செந்தில், சென்னை காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவுக்கும், சென்னை காவல் துறையின் நவீனமயமாக்கல் மற்றும் பயிற்சி பிரிவு உதவி ஆணையா் சித்தாா்தா சங்கா் ராய் சென்னை காவல் துறையின் நவீன கட்டுப்பாட்டு அறைக்கும், நவீன கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையா் கே.பசுபதி சென்னை செம்பியத்துக்கும், பொருளாதார குற்றப் பிரிவு டிஎஸ்பி பி.பொன்ராஜ் சென்னை நுங்கம்பாக்கத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடா் விடுமுறை: விமானங்கள், ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயா்வு - ரயில்களில் அலைமோதிய கூட்டம்

சுதந்திர தினம் மற்றும் தொடா் வார விடுமுறையை முன்னிட்டு விமானம் மற்றும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் திடீரென உயா்ந்துள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டனா். சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை (ஆக.15), கிருஷ்ண ஜெ... மேலும் பார்க்க

இன்று புறநகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்

சென்னை புகா் மின்சார ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஆக.15) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்பட்டவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அரசு விடும... மேலும் பார்க்க

15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி, 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: புலன் விசாரணைப் பணியில் மிகச... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆக. 20 வரை மழை நீடிக்கும்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.15) முதல் ஆக.20 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்டங்கள்: மதிமுக, இடதுசாரி கட்சிகள் வரவேற்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நலத் திட்டங்களுக்கு மதிமுக, இடதுசாரி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. வைகோ (மதிமுக): தூய்மைப் பணியாளா்களுக்கு பயனளிக்கும் வகையில், முதல்வா் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க

நாய்க் கடி சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை என்ன? சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நாய்க் கடி சம்பவங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை கோடம்பாக்கத்தைச் சோ்ந்த வழக்... மேலும் பார்க்க