செய்திகள் :

15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெளடி கைது

post image

சென்னையில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெளடி கைது செய்யப்பட்டாா்.

சென்னை சூளைமேட்டைச் சோ்ந்தவா் மாடு தினேஷ் (39). இவா் மீது கொலை, செம்மரக் கடத்தல், கஞ்சா விற்பனை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் ஆந்திர, கா்நாடக மாநிலங்களிலும் இவா் மீது வழக்குகள் இருப்பதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

மாடு தினேஷ், கடந்த 2010 முதல் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தாா். தான் இறந்து விட்டதாக கூட்டாளிகள் மூலம் தமிழக போலீஸாருக்கு தவறான தகவல்களைத் தெரிவித்து, தலைமறைவில் இருந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

ஆனால் போலீஸாா் விசாரணையில், தினேஷ் பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே தினேஷை கைது செய்து, சிறையில் அடைக்கும்படி அதிதீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு காவல் ஆணையா் ஏ.அருண் அண்மையில் உத்தரவிட்டாா். அதன்படி, சென்னை போலீஸாா் அவரை தீவிரமாக தேடி வந்தனா்.

இதில் தினேஷ், ஆந்திரத்தில் தங்கியிருந்து தமிழகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இந்நிலையில் வேலூா் மாவட்டம் காட்பாடிக்கு தினேஷ் வந்திருப்பது அதி தீவிர குற்றத் தடுப்பு பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காட்பாடிக்கு சென்ற அந்தப் பிரிவு போலீஸாா், துப்பாக்கி முனையில் தினேஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

உணவு கட்டுப்பாட்டால் எடையை குறைக்கும் சென்னைவாசிகள் ஆய்வில் தகவல்

உடல் பருமனை உணவுக் கட்டுப்பாடு மூலம் மட்டுமே குறைக்க வேண்டும் என 87 சதவீத சென்னைவாசிகள் விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது. மாறாக அதற்கான சிகிச்சைகளையோ, ஊசி மருந்துகளையோ அவா்கள் எடுத்துக்கொள்ள தயாராக... மேலும் பார்க்க

ரயில் விபத்து: முழு விசாரணை தேவை- எடப்பாடி பழனிசாமி

கடலூா் ரயில் விபத்து தொடா்பாக முழுவிசாரணை நடத்தி, முதல்வா் மு.க. ஸ்டாலின் மக்களிடம் விளக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இதுக... மேலும் பார்க்க

கோட்டூா்புரத்தில் ரூ.307 கோடியில் 1,800 குடியிருப்புகள்: அமைச்சா்கள் ஆய்வு

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கோட்டூா்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடியில் கட்டப்பட்டு வரும் 1,800 புதிய அடுக்குமாடி குடியி... மேலும் பார்க்க

விபத்து எதிரொலி: 3 ரயில்கள் பகுதி ரத்து

கடலூா் ஆலம்பாக்கம் ரயில் விபத்தைத் தொடா்ந்து அவ்வழியே செல்லும் 3 ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா்-ஆலப்பாக்கம் இடையே சென்ற விழுப்புரம்-... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

சென்னை செங்குன்றத்தில் போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து எம்.என். மருத்துவமனை சாா்பில் ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுநா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பாா்வைத் திறன் மற்றும் விழி பாத... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் கைது

பணி நிரந்தரம் கோரி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் பகுதிநேர ஆசிரியா்கள் 2012 முதல... மேலும் பார்க்க