செய்திகள் :

15% ஏற்றத்துடன் வெற்றி ஓட்டத்தில் எடர்னல்!

post image

புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டு வருவாய்க்கு பிறகு, ஜொமாடோ மற்றும் பிளிங்கிட் பிராண்டுகளுக்குச் சொந்தமான உணவு விநியோக மற்றும் விரைவு வர்த்தக நிறுவனமான எடர்னல் பங்குகள் சுமார் 15 சதவிகிதம் உயர்ந்தன.

பிஎஸ்இ-யில் பங்கின் விலை 14.89 சதவிகிதம் உயர்ந்து ரூ.311.60 ஆக இருந்தது. இது 52 வாரத்தின் அதிகபட்சம் விலையாகும்.

என்எஸ்இ-யில் இதன் விலை 14.55 சதவிகிதம் உயர்ந்து ரூ.311.25 ஐ எட்டியது. நேற்றைய வர்த்தகத்தில் எடர்னல் பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவிகிதம் உயர்ந்தன.

எடர்னல் மீண்டும் எங்களை ஆச்சரியப்படுத்தியது என்றது பிளிங்கிட். 2024-25ஆம் ஆண்டின் 4வது காலாண்டு பிறகு எச்சரிக்கையான தொனிக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதாக ஜே.எம். பைனான்சியல் இன்ஸ்டிடியூஷனல் செக்யூரிட்டீஸ் லிமிடெட் தெரிவித்தது.

ஜூன் வரையான காலாண்டில் எடர்னல் ரூ.25 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியதாக அறிவித்தது. கடந்த மார்ச் மாதத்தில் எடர்னல் என பெயரை மாற்றிகொண்ட இந்த நிறுவனம், முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.253 கோடி நிகர லாபத்தை ஈட்டியது.

மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில், செயல்பாடுகளிலிருந்து நிறுவனத்தின் வருவாய் ரூ.7,167 கோடியாக இருந்தது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.4,206 கோடியாக இருந்தது.

இதையும் படிக்க: சோலெக்ஸ் எனர்ஜியின் வருவாய் 84% அதிகரிப்பு!

Shares of food delivery and quick commerce firm Eternal, which owns the Zomato and Blinkit brands, on Tuesday jumped nearly 15 per cent after its June quarter earnings announcement.

அனில் அம்பானி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்த காரணம் என்ன?

புது தில்லி: தொழில்களில் நஷ்டம், கடன் என பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான 110 இடங்களில் இன்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியிருக்கிறது.யெஸ் வங்கியிடமிருந்து கடன் பெற்ற... மேலும் பார்க்க

கடும் சரிவுடன் முடிவடைந்த சென்செக்ஸ்!

புது தில்லி: வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான வியாழக்கிழமை(ஜூலை 24) சென்செக்ஸ் கடும் சரிவுடன் முடிவடைந்தது.மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்டி இரண்டும் சரிவுட... மேலும் பார்க்க

செல்போனைவிட குறைவான எடையில் பவர் பேங்க்!

செல்போனைவிட குறைவான எடை கொண்ட பவர் பேங்க்கை அம்ப்ரேன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.பவர் பேங்க், சார்ஜர், சார்ஜிங் வயர், இயர்போன், டிரிம்மர், ஹேர் டிரையர் போன்ற எலக்ட்ரிக் பொருள்களை தயாரிக்கும் இந்திய... மேலும் பார்க்க

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! 400 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!

பங்குச் சந்தை இன்று(வியாழக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,779.95 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.50 மணி நிலவரப்பட... மேலும் பார்க்க

குறைந்த விலை வீடுகளின் விற்பனை 32% சரிவு

இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் ரூ.1 கோடிக்கு குறைவான விலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை 2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி-ஜூன்) 32 சதவீதம் சரிந்துள்ளது. அதே நேரம் ஆடம்பர வ... மேலும் பார்க்க

கார்வார் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி

மும்பை: கர்நாடகாவை சேர்ந்த தி கார்வார் நகர்ப்புற கூட்டுறவு வங்கியிடம் போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாததால், அதன் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.இதன் விளை... மேலும் பார்க்க