செய்திகள் :

15% ஏற்றத்துடன் வெற்றி ஓட்டத்தில் எடர்னல்!

post image

புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டு வருவாய்க்கு பிறகு, ஜொமாடோ மற்றும் பிளிங்கிட் பிராண்டுகளுக்குச் சொந்தமான உணவு விநியோக மற்றும் விரைவு வர்த்தக நிறுவனமான எடர்னல் பங்குகள் சுமார் 15 சதவிகிதம் உயர்ந்தன.

பிஎஸ்இ-யில் பங்கின் விலை 14.89 சதவிகிதம் உயர்ந்து ரூ.311.60 ஆக இருந்தது. இது 52 வாரத்தின் அதிகபட்சம் விலையாகும்.

என்எஸ்இ-யில் இதன் விலை 14.55 சதவிகிதம் உயர்ந்து ரூ.311.25 ஐ எட்டியது. நேற்றைய வர்த்தகத்தில் எடர்னல் பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவிகிதம் உயர்ந்தன.

எடர்னல் மீண்டும் எங்களை ஆச்சரியப்படுத்தியது என்றது பிளிங்கிட். 2024-25ஆம் ஆண்டின் 4வது காலாண்டு பிறகு எச்சரிக்கையான தொனிக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதாக ஜே.எம். பைனான்சியல் இன்ஸ்டிடியூஷனல் செக்யூரிட்டீஸ் லிமிடெட் தெரிவித்தது.

ஜூன் வரையான காலாண்டில் எடர்னல் ரூ.25 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியதாக அறிவித்தது. கடந்த மார்ச் மாதத்தில் எடர்னல் என பெயரை மாற்றிகொண்ட இந்த நிறுவனம், முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.253 கோடி நிகர லாபத்தை ஈட்டியது.

மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில், செயல்பாடுகளிலிருந்து நிறுவனத்தின் வருவாய் ரூ.7,167 கோடியாக இருந்தது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.4,206 கோடியாக இருந்தது.

இதையும் படிக்க: சோலெக்ஸ் எனர்ஜியின் வருவாய் 84% அதிகரிப்பு!

Shares of food delivery and quick commerce firm Eternal, which owns the Zomato and Blinkit brands, on Tuesday jumped nearly 15 per cent after its June quarter earnings announcement.

தங்கத்தை தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்ட வெள்ளி!

புதுதில்லி: வர்த்தகர்களிடமிருந்து வலுவான தேவை மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக தலைநகர் தில்லியில் வெள்ளியின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியது.வெள்ளி விலை இன்று கிலோ ஒன்றுக்கு ரூ.4,000 அதிகர... மேலும் பார்க்க

நம்ப முடியாத விலைக்குறைப்பு! ரூ. 15,000க்கு கிடைக்கும் ஒன்பிளஸ் பேட் லைட்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பேட் லைட் எனும் கையடக்கக் கணினி ரூ.15 ஆயிரத்திற்கு கிடைக்கிறது. இந்நிறுவனத்தின் வேறு எந்த கையடக்கக் கணினியிலும் இல்லாத வகையில் அதிக பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளதால், இந்த விலை... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 3 காசுகள் குறைந்து ரூ.86.41 ஆக நிறைவு!

மும்பை: வலுவான டாலர் மதிப்பு மற்றும் அந்நிய நிதி வெளியேறியதற்கு மத்தியில், தொடர்ந்து ஆறாவது நாளாக இன்று இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமாகவே இருந்து. இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ... மேலும் பார்க்க

அதிக பேட்டரி திறனுடன் கூடிய 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ரியல்மீ நிறுவனம் நர்ஸோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு கடந்த மாதம் நர்ஸோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்று விலை குறைவாக 4ஜி ஸ்மார்ட... மேலும் பார்க்க

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 82,726.64 புள்ளிகளாகவும், நிஃப்டி 25,219.90 புள்ளிகளுடன் நிறைவு!

மும்பை: ஜப்பான் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்தும், ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்கைத் தொடர்ந்து, இன்றைய பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் 539.83 புள்ளிகள் உயர்ந்த ந... மேலும் பார்க்க

டிராக் டார்க் கண்ட்ரோல் வசதியுடன் ஆர்டிஆர் 310!

அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு ஆர்டிஆர் 310 பைக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக மேம்படுத்தப்பட்ட மாடல் தற்போ... மேலும் பார்க்க