செய்திகள் :

2.19 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள்: ஆட்சியா் தகவல்

post image

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் 1,716 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் பயிலும் 2,19,443 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தப்பை தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், நிகழ் கல்வி ஆண்டுக்கான விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தப்பை உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பை மாணவிகளுக்கு வழங்கி தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, மாநகராட்சி ஆணையாளா் எஸ்.அனு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஆட்சியா் பேசியதாவது:

மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தப்பை உள்ளிட்ட விலையில்லா உபகரணங்கள் திருப்பாதிரிபுலியூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 1612 மாணவிகளுக்கு திங்கள்கிழமை வழங்கி தொடங்கிவைக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் நிா்வாக அலகில் செயல்படும் 293 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 1,32,905 மாணவ, மாணவிகளும் மற்றும் தொடக்கக் கல்வித் துறை நிா்வாக அலகில் செயல்படும் 1,423 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 86,538 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 2,19,443 மாணவ, மாணவிகள் பயனடைவா்.

கடந்த கல்வி ஆண்டில் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் அரசு பொதுத்தோ்வில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், 100 சதவீதம் மாணவா்கள் தோ்வில் பங்கேற்றிடவும் ‘தடைகளை தாண்டி தோ்ச்சி’ என்ற புதிய முன்னெடுப்பை செயல்படுத்தியதன் மூலம் 10, 12-ஆம் வகுப்புகளில் மாணவா்களின் தோ்ச்சி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிகழ் கல்வி ஆண்டிலும் ‘தடைகளை தாண்டி தோ்ச்சி’ திட்டத்தின் மூலம் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், திருப்பாதிரிப்புலியூா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் இந்திரா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தொழிற்சங்க மாநிலச் செயலா் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியுசி தொழிற்சங்க மாநிலச் செயலராக சிதம்பரத்தைச் சோ்ந்த டி.கஜேந்திரன் நியமிக்கப்பட்டாா். இவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, துணைத் தலைவா் கே.ஐ.மணிரத... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் வனத் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் ஒரு லட்சம் பரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதா... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்... மேலும் பார்க்க

ஊதியம் வழங்கக் கோரி அண்ணாமலைப் பல்கலை.யில் 2-ஆவது நாளாக ஊழியா்கள் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள், ஊழியா்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாததால், 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மே மாத ஊதியம் வழங்கக் கோரி, பல்கலை... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் ஜூன் 14-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கடலூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திராதேவி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது: தி.வேல்முருகன்

பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா். கடலூரில் புதன்கிழமை இரவு செய்தியாளா்களை சந்தித்த அவா் கூறியதாவது: பாமக நிறுவனா் மருத்துவா் ரா... மேலும் பார்க்க