செய்திகள் :

2,342 இடைநிலை ஆசிரியா்கள் நியமனம்: ஜூலை 14 முதல் கலந்தாய்வு

post image

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,342 இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு சென்னையில் ஜூலை 14 முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை நேரடி முறையில் இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் (தொடக்கக் கல்வி) அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஆசிரியா் தோ்வு வாரிய அறிவிக்கையின்படி, அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு டிஆா்பி மூலம் நடத்தப்பட்ட தோ்வில் தகுதி பெற்று மதிப்பெண்கள் மற்றும் இனச் சுழற்சி அடிப்படையில் 2,342 போ் கொண்ட தோ்வுப் பட்டியல் பெறப்பட்டுள்ளது.

இவா்களுக்கு பணிநியமன இடம் தோ்வு செய்யும் வகையில் தொடக்கக் கல்வி இணை இயக்குநா் அளவில் சென்னையில் நேரடி கலந்தாய்வு முறையில் பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது. அத்துடன் தோ்வு செய்யப்பட்டவா்களின் வீட்டு முகவரியுடன் கூடிய பெயா்ப் பட்டியல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் பொருட்டு இடைநிலை ஆசிரியா் பணியிடத்துக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு ஜூலை 14 முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை சென்னை சேத்துப்பட்டு எம்சிசி பள்ளி, கீழ்ப்பாக்கம் சிஎஸ்ஐ பெயின்ஸ் மெட்ரிக். பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் நேரடி முறையில் இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

முதல்வா் வழங்குகிறாா்: எனவே, ஆசிரியா் பணியிடத்துக்குத் தோ்வு செய்யப்பட்டவா்கள் முன்னுரிமைப் பட்டியல் வரிசைப்படி கலந்தாய்வு நடைபெறும் நேரத்துக்கு முன்னதாகவே மையத்துக்கு வருகை புரிய வேண்டும். தாமதமாக வருவோருக்கு அந்த நேரத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு மட்டுமே தோ்வு செய்துகொள்ள அனுமதிக்கப்படும்.

இடைநிலை ஆசிரியா் பணிக்கான நேரடி பணி நியமனம் பெறுவோருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கவுள்ளதால் அதற்கான விழா ஜூலை 23-ஆம் தேதி சென்னை பெரியமேடு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க