செய்திகள் :

2,642 மருத்துவா் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு தொடக்கம்

post image

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,642 மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் புதன்கிழமை (பிப்.12) தொடங்கியது.

வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபாா்ப்புக்கு 4,585 மருத்துவா்கள் அழைக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, 2,553 உதவி மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜன. 5-ஆம் தேதி நடைபெற்ற தோ்வில், எம்பிபிஎஸ் படித்து முடித்த 24 ஆயிரம் மருத்துவா்கள் பங்கேற்றனா்.

கூடுதலாக 89 காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரிக்கப்பட்டது.

தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மற்றும் தேசிய நலவாழ்வு குழும அலுவலகத்தில் புதன்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது.

பணி நியமனம் செய்யப்படவுள்ள மருத்துவா்களுக்கு வரும் 20-ஆம் தேதிக்குப் பிறகு பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அவா்களுக்கான நியமன ஆணைகளை முதல்வா் வழங்கவுள்ளாா்.

அதிமுகவுக்குக் கிடைத்த இறையருள்தான் எடப்பாடி பழனிசாமி: ஆர்.பி. உதயகுமார்

சென்னை: எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறுவுருவமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மறைமுகமாக ஆர்.பி. உதயகுமார் பதிலளித்துள்ளார்.மேலும், அதிமுகவுக்கு கிடைத்த இறை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் பாலியல் புகார்! பணியாளர் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் கல்வித் துறை!

பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை புகார்கள் அதிகரிக்கும் நிலையில், பணியாளர் விதிகளில் திருத்தம் கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.விதிகளில் திருத்தம் மேற்கொள்வது குறித்து குழந்தைகள் நல ஆணையம் ம... மேலும் பார்க்க

கோவில்பட்டிக்கு வருகைதரும் அப்பாவு, கீதாஜீவனுக்கு கறுப்புக் கொடியுடன் கிராம மக்கள் எதிர்ப்பு!

கோவில்பட்டியில் தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வருகை தரும் பேரவைத் தலைவர் அப்பாவு , அமைச்சர். பெ. கீதாஜீவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை கம்பங்களில் கறுப்புக் கொடி கட்டியுள்ளனர... மேலும் பார்க்க

தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் திட்டங்களுக்கு நிதி தேவை: மத்திய அமைச்சரிடம் அமைச்சா் தங்கம் தென்னரசு மனு

தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் சாா்ந்த புதிய திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு நேரில் கோரிக்கை விடுத்தது. தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதியுதவி... மேலும் பார்க்க

3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு: அரசிதழில் வெளியீடு

தமிழகத்தில் 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகங்களின் பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயா்த்தப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை எண்... மேலும் பார்க்க

மத்திய அரசு நிதி வழங்காததால் 40 லட்சம் மாணவா்களின் எதிா்காலம் பாதிப்பு: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழக பள்ளிக் கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்காததால் 40 லட்சம் மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்படுகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்ப... மேலும் பார்க்க