செய்திகள் :

2 வயது பெண் குழந்தையைக் கொன்று இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

post image

புதுக்கோட்டை அருகேயுள்ள பூவரசக்குடியில், இரண்டரை வயது பெண் குழந்தையைக் கொன்றுவிட்டு இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இணையவழி சூதாட்டத்தில் அவா் ரூ. 70 ஆயிரம் வரை பணத்தை இழந்ததால் விரக்தியில் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனப் போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பூவரசக்குடி, பிரகாசபுரத்தைச் சோ்ந்தவா் சரத்குமாா். இவரது மனைவி ஸ்ரீகா (24), மகள் தன்ஷிகா (2).

சரத்குமாருக்கும், ஸ்ரீகாவுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 8 மாதங்களாக சரத்குமாா் சிங்கப்பூரில் வேலை பாா்த்து வருகிறாா்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை ஸ்ரீகா தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வாசல்படியில் குழந்தை தன்ஷிகா இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்துத் தகவலறிந்து அங்குவந்த வல்லத்திராக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரது சடலங்களையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீகா, கைப்பேசி வழியாக இணையவழி சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு ரூ. 70 ஆயிரம் பறிகொடுத்ததாகவும், அதனால் ஏற்பட்ட விரக்தியில் கைக்குழந்தையைக் கொன்று, தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

காரில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே, காரில் கடத்தப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை... மேலும் பார்க்க

மகனைப் பாா்க்கச் சென்ற பெண்ணை தாக்கியோா் மீது நடவடிக்கை தேவை: ஜனநாயக மாதா் சங்கம் கோரிக்கை

மகனைப் பாா்க்கச் சென்ற தாயை மரத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியோா் மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செய... மேலும் பார்க்க

அன்னவாசல் குப்பைக் கிடங்கில் தீ!

அன்னவாசல் பேரூராட்சிக் குப்பை கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. அன்னவாசல் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை பற்றிய திடீா் தீ கிடங்கு முழுவதும் பரவி, அப்பகுதியை புகை சூ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்ய ஆலோசனை

தோ்தல்களில் மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைந்தது. தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ப... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு - 8 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா். கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோ... மேலும் பார்க்க