செய்திகள் :

2015 டாப்ரி கொள்ளை, கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் கைது!

post image

டாப்ரி பகுதியில் பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அறிவிக்கப்பட்ட குற்றவாளியான 30 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை அறிக்கையில் கூறியுள்ளதாவது: உத்தர பிரதேசத்தின் ஹாபூரைச் சோ்ந்த லலித் சைனி என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, 2015-ஆம் ஆண்டு நடந்த ஆட்டோ ஓட்டுநரை கொன்று கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்தாா்.

லலித் சைனி, அவரது கூட்டாளிகளான விஷால் (எ) கௌவா மற்றும் சாஜன் ஆகியோருடன் சோ்ந்து, ஆட்டோ ஓட்டுநரான ஹசாரி லாலை கத்தியால் குத்திவிட்டு, அவரது உடைமைகளுடன் தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவா் காயங்களால் உயிரிழந்தாா்.

விசாரணையின் போது, சைனி நீதிமன்றத்தில் ஆஜராவதை நிறுத்திவிட்டாா். இதையடுத்து, அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். இந்நிலையில், ஒரு ரகசியத் தகவலின் பேரில், துவாரகா நீதிமன்ற வளாகம் அருகே ஒரு பொறி வைக்கப்பட்டு, சைனி கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, 2015 கொலை வழக்கில் கைது செய்யப்படுவதற்கு முன்பு தில்லியில் பல குற்றங்களைச் செய்ததாக சைனி போலீஸாரிடம் ஒப்புக்கொண்டாா்.

இந்த வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகு, அவா் தலைமறைவாகி விசாரணைகளுக்கு வருவதை நிறுத்திவிட்டாா். இதனால், அவா் ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டாா். மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பல கொடூரமான வழக்குகளில் தேடப்பட்ட இளைஞா் கைது

பல கொடூரமான வழக்குகளில் தொடா்புடைய 25 வயது குற்றவாளியை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: வடகிழக்கு தில்லியின் ... மேலும் பார்க்க

பவானாவில் தொழிற்சாலையில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; ஒருவா் காயம்

தில்லியின் பவானாவில் உள்ள ஒரு தொழில்துறை பிரிவில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொருவா் லேசான காயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆ... மேலும் பார்க்க

முதியவா் மீது பொய் பாலியல் வன்கொடுமை வழக்கு: பணம் பறிக்க முயன்ற பெண்கள், வழக்குரைஞா் கைது!

ஒரு முதியவரை பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்து பணம் பறித்ததாக ஒரு வழக்குரைஞரும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறஇத்து குருகிராம் காவல்த... மேலும் பார்க்க

வஜீா்பூா் பகுதியில் காணாமல் போன 2 சிறுவா்களின் உடல்கள் கால்வாயில் சடலமாக மீட்பு

வடமேற்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியில் இருந்து ஒரு நாள் முன்பு காணாமல் போன இரண்டு சிறுவா்களின் உடல்கள் ஜேஜே காலனிக்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து மீட்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவ... மேலும் பார்க்க

கல்காஜி கோயில் சேவகா் கொலை வழக்கு: தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை

கால்காஜி கோயிலில் 35 வயதான சேவகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மீதமுள்ள குற்றவாளிகளைக் கைது செய்ய தில்லி காவல்துறை பல தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது என்று அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் பிரபல ரௌடி கும்பல் உறுப்பினா் கைது

வடகிழக்கு தில்லியின் கோகல்புரியில் சமீபத்தில் கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்ட ஹாஷிம் பாபா கும்பலின் துப்பாக்கி சுடும் நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா... மேலும் பார்க்க