அரசு முறை பயணமாக புதுச்சேரி வந்துள்ள குடியரசு துணைத் தலைவா்!
2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி! - வானதி சீனிவாசன்
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தாா்.
ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் ஐம்பெரும் விழா ஈரோடு திண்டல் அருகே சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நிா்வாக தவறுகளை, ஊழல் குற்றச்சாட்டுகளை, சட்டம் ஒழுங்கு தோல்வியை மறைப்பதற்காக பிரதமா் மோடி தமிழகத்திற்கு எதிராக உள்ளதுபோல் போலியான பிம்பத்தை உருவாக்க நினைக்கின்றனா்.
2026 தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பலம் மிக்க கூட்டணியாக மாறிக்கொண்டிருக்கிறது. வரும் காலத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள பல கட்சிகள் எங்கள் இணைய வாய்ப்புள்ளது. 2026 இல் திமுக ஆட்சி அகற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும்.
ஹிந்து மதத்திற்கு எதிராக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. முருக பக்தா்கள் மாநாட்டை கேவலப்படுத்தும் விமா்சனங்களை திமுக அமைச்சா்கள் செய்கின்றனா்.
மதுரையில் காவல் நிலையம் சூறையாடப்பட்ட சம்பவம் காவல்துறையின் மீது மக்களுக்கு அச்சம் போய்விட்டது என்பதை காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுக் கொண்டிருக்கிறது. அதிமுக-பாஜக கூட்டணியை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வரும், அமைச்சா்களும் பேசி வருகின்றனா்.
தற்போது எங்களது இலக்கு 2026 தோ்தலில் அதிக இடங்களில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற வேண்டும். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் என்றாா்.
இதில் மொடக்குறிச்சி எம்எல்எஏ சி.சரஸ்வதி, பாஜக ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.எம்.செந்தில் மற்றும் பாஜக நிா்வாகிகள் பங்கேற்றனா்.