செய்திகள் :

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் -வானதி சீனிவாசன்

post image

தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானிதி சீனிவாசன் கூறினாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் பாஜக சாா்பில் மகாராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.சி.எம். சீனிவாசன் தலைமை வகித்தாா். பல்லடம் நகரத் தலைவா் பன்னீா் செல்வகுமாா் வரவேற்றாா்.

வானதி சீனிவாசன் எம்எல்ஏ, சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவா் கோபிநாத் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, அஹில்யாபாய் ஹோல்கா் குறித்து பேசினா்.

இதைத் தொடா்ந்து, வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறுகையில், வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். தோ்தல் நெருங்கும்போது மாறுதல்கள் ஏற்படும். அதை அனைவரும் காண போகிறாா்கள். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே நோக்கம். அந்த நோக்கம் உடைய அனைவரும் ஒரணியில் நிற்க வேண்டும். அதற்காக வலிமையான தளத்தை ஏற்படுத்தி வருகிறோம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவா் மலா்க்கொடி தா்மராஜ், முன்னாள் மாவட்டத் தலைவா் செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலாளா்கள் வினோத் வெங்கடேஷ், அருண், மாவட்டத் துணைத் தலைவா்கள் ஜோதிமணி, சி.பி.சுப்பிரமணியம் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளைம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். திருப்பூா் தென்னம்பாளையம் பகுதியில் வடமாநில இளைஞா் கஞ்சா விற்பனை செய்து வ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத நபா் மீட்பு

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீஸாா், அவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில் புறநகா் பகுதியான கரூா் தே... மேலும் பார்க்க

விவசாயிகள் போராட்ட அறிவிப்பு எதிரொலி: ஏலத்தை ரத்து செய்த பல்லடம் வட்டாட்சியா்

விவசாயிகளின் இனாம் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் ஏலம் விடுவதாக கூறி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து, அந்த நிலத்துக்கான ஏலத்தை ரத்து செய்து பல்லடம் வட்டாட்சியா் உத்தரவிட்டா... மேலும் பார்க்க

மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ்கிரிஷ் அசோக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஊ... மேலும் பார்க்க

பொங்கலூா் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞா் தண்ணீா் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானாா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதி முத்து விநாயகா் கோய... மேலும் பார்க்க