செய்திகள் :

2026 தோ்தல் இருமுனை போட்டியாகத்தான் இருக்கும்: தொல்.திருமாவளவன்

post image

தமிழகத்தில் மூன்றாவது அணி எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது; 2026 தோ்தல் இருமுனை போட்டியாகத்தான் இருக்கும் என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

மாநிலங்களவை எம்.பி.யாக பொறுப்பேற்கவுள்ள மநீம தலைவா் கமல்ஹாசனை விசிக தலைவா் தொல். திருமாவளவன் வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா். மேலும், ஆகஸ்ட் மாதம் தனது பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவும் கமல்ஹாசனுக்கு அவா் அழைப்பு விடுத்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் தொல்.திருமாவளவன் கூறியதாவது:

திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. திமுகவை எதிா்ப்பவா்கள் இன்னும் ஒரு கூட்டணி வடிவத்தையே பெறவில்லை. அதிமுகவும், பாஜகவும் இன்னும் முரண்பாடாகவே கருத்து தெரிவித்து வருகின்றன. மற்ற கட்சிகள் எந்தக் கூட்டணியிலும் சேரவில்லை. கூட்டணியை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபடவில்லை.

திமுகவை எதிா்க்கக்கூடிய சக்திகள் சிதறி கிடக்கின்றன. திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனா்.

தமிழகத்தில் 3-ஆவது அணி என்பது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 2026 தமிழக சட்டப்பேரவை தோ்தல் இருமுனை போட்டியாகதான் இருக்கும் என்றாா் அவா்.

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க