செய்திகள் :

213 ஆப்கன் அகதிகளை தாயகம் கடத்திய பாகிஸ்தான்!

post image

பாகிஸ்தானில் 213 ஆப்கன் அகதிகள் தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிஸ்தான் நாட்டினரை நாடு கடத்த விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவானது வரும் மார்ச் 31 அன்று முடிவடையவுள்ள நிலையில் தற்போது 213 ஆப்கான் அகதிகள் தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரத்தில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் 923 ஆப்கன் மக்கள் கைது செய்யப்பட்டு கோல்ரா மொர் பகுதியிலுள்ள ஆப்கன் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர். அதில், 213 பேர் நேற்று (மார்ச் 27) ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டு தங்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 26 அன்று அகதிகள் முகாமிலிருந்து 22 கைதிகள் தப்பி சென்றனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 86 பேருடைய விசா காலாவதியானதாகவும், 116 பேர் ஆப்கன் குடியுரிமை அட்டை உரிமையாளர்கள் எனவும் 290 பேர் பதிவு செய்த சான்றுகள் வைத்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் அரசு பாகிஸ்தானின் இஸ்லாமபாத் மற்றும் ராவல்பிண்டியில் வாழ்ந்து வரும் ஆப்கன் நாட்டினர் வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபின் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு முடிவதற்குள் ஆப்கன் நாட்டினரை வலுக்கட்டாயமாக நாடு கடத்துவதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பல்வேறு மனித நேயமற்ற முறைகளைக் கையாள்வதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு ஐக்கிய நாடுகள் உள்பட சர்வதேச அளவிலான மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: லெபனான் - சிரியா இடையே எல்லை வரையறை ஒப்பந்தம்!

வடக்கு காஸா மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!

இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து வடக்கு காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் ஸ்தெரோத் நகரத்தின் மீதும் அதன் அருகிலுள்ள விவசாயப் பக... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: 35 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய பாகிஸ்தான்!

மியான்மர் நாட்டில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சுமார் 35 டன் அளவிலான நிவாரணப் பொருள்களை பாகிஸ்தான் அரசு அனுப்பியுள்ளது. மியான்மரில் கடந்த மார்ச் 28 அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான... மேலும் பார்க்க

அமெரிக்காவின் தொடர் தாக்குதலுக்கு இரையாகும் யேமன் நகரங்கள்!

யேமன் நாட்டின் மீது அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக ஹவுதி கிளர்ச்சிப்படை தெரிவித்துள்ளது.யேமனின் வடக்கு சனா மற்றும் சதா மாகாணங்களின் மீது அமெரிக்க கடந்த சில மணி நேரங்களில் மட்டும... மேலும் பார்க்க

தாயகம் திரும்பிய 8.79 லட்சம் ஆப்கன் மக்கள்! எஞ்சியவர்களை நாடு கடத்தும் பாகிஸ்தான்!

பாகிஸ்தானிலிருந்து அப்கான் அகதிகளை தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தும் பணி துவங்கவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வரும் ஆப்கன் குடியுரிமை அட்டை... மேலும் பார்க்க

மலேசியா எரிவாயு குழாய் வெடி விபத்து: 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

மலேசியா நாட்டில் எரிவாயு குழாய் வெடி விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் மிகப் பெரிய நகரமான கோலாலம்பூரின் புத்ரா பகுதியில் இன்று (ஏப் 1) காலை 8.10... மேலும் பார்க்க

செலவில்லாமல் ‘ஜிப்லி’ படங்களை உருவாக்குவது எப்படி?

செலவில்லாமல் ‘ஜிப்லி’ படங்களை உருவாக்குவது எப்படி? என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.இணைதளவுலகில் எங்கும் ‘ஜிப்லி’மயமாக அலைவீசிக் கொண்டிருக்கிறது. சின்னச்சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும... மேலும் பார்க்க