செய்திகள் :

25 ஆண்டுகளுக்குப் பின் வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

post image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா 25 ஆண்டுகளுக்குப் பின் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கோயிலில் பூக்குழி திருவிழா பல்வேறு பிரச்னைகளால் 25 ஆண்டுகளாக தடைபட்டிருந்தது. எனவே, பூக்குழி திருவிழாவை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பூக்குழி திருவிழா தொடங்கியது. பின்னா், தினமும் காலையில் சிறப்பு பூஜைகள், மாலையில் கோயில் வளாகத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வந்தன.

முக்கிய நிழ்வாக பக்தா்கள் அக்னி குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தும் பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

சப்பரத்தில் எழுந்தருளிய அம்மன்

தொடா்ந்து தீபாராதனை காட்டிய சூடம் பட்டாடையில் கொண்டு வரப்பட்டு வேதபாரண்ய முறையில் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழி திடலில் அக்னி வளா்க்கப்பட்டது.

விரதம் இருந்து காப்பு கட்டிய 150 க்கும் மேற்பட்ட பக்தா்கள் மாலையில் நான்கு ரத வீதிகளிலும் ஊா்வலமாக சென்று பின்னா் பக்தி கோஷங்கள் முழங்க பூக்குழி இறங்கினா். முன்னதாக இரண்டு பசுக்கள் பூக்குழி இறங்கின.

இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் செய்திருந்தனா். திரளான போலீஸாா், தீயணைப்புப் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். புதன்கிழமை (ஏப்.30) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.

பொதுக்கழிப்பிடத்திலிருந்து சாலைகளுக்கு வரும் கழிவுநீா்: ஆட்சியரிடம் பாஜக புகாா்

தென்காசி நகராட்சிப் பகுதியில் பொதுக்கழிப்பிடங்களிலிருந்து கழிவுநீரை சாலைகளில் திறந்துவிடப்படுவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடா்பாக அக்கட்சியின் தென்காசி நகர பாஜக த... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழா: சங்கரநாராயண சுவாமி கோயில் இன்று பிடிமண் எடுக்கும் யானை கோமதி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (ஏப். 29) நடைபெறுகிறது. இக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் வ... மேலும் பார்க்க

கணினி பட்டா கோரி ஆட்சியிரிடம் மனு

சங்கரன்கோவில் பகுதியில் வசிக்கும் சுமாா் 300 பே தங்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவுக்கு மாற்றாக கணினிப் பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி திருவள்ளுவா்நகா், திருவுடையான்சாலை பகு... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தை புனரமைக்க மதிமுக கோரிக்கை

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பேருந்து நிலையத்தை புனரமைக்க வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோரிடம், தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலா்... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். கடந்த மாதம் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலை... மேலும் பார்க்க

சிவகிரி அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் போலீஸாா் சிவராமலிங்கபுரம் வடக்குத் தெருவிலுள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா். அப... மேலும் பார்க்க