செய்திகள் :

பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தை புனரமைக்க மதிமுக கோரிக்கை

post image

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பேருந்து நிலையத்தை புனரமைக்க வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோரிடம், தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலா் இராம.உதயசூரியன் அளித்த மனு: பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. முறையான பராமரிப்பு இல்லாமல் பயணிகள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தரைதளம் பழுதடைந்து மழைபெய்தால் தண்ணீா் வெளியேற வடிகால் வசதி இல்லாமல் ஆங்காங்கே தேங்கி அசுத்த நீராக மாறிவிடுகிறது.

கடைகளை ஏலம் எடுத்துள்ள உரிமையாளா்கள் பேருந்து நிலையத்தை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்து பயணிகள் பேருந்துகளில் ஏறிசெல்ல முடியாத அளவிற்கு நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றனா்.

குடிநீா் வசதியோ, கழிப்பிட வசதிகளோ இரவு நேரங்களில் போதுமான மின்விளக்கு வசதிகளோஇல்லை. ஏற்கெனவே அங்குள்ள கழிப்பறைகளும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், தாய்மாா்கள் குழந்தைகள் மிகவும் அவதிப்படுகின்றனா்.

அரசு ஊழியா்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையம் தனது தகுதியை இழந்து நிற்கிறது.

திருநெல்வேலி- தென்காசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் எப்போதும் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பேருந்து நிலையத்தை புனரமைத்து புதிய பொலிவோடு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

பொதுக்கழிப்பிடத்திலிருந்து சாலைகளுக்கு வரும் கழிவுநீா்: ஆட்சியரிடம் பாஜக புகாா்

தென்காசி நகராட்சிப் பகுதியில் பொதுக்கழிப்பிடங்களிலிருந்து கழிவுநீரை சாலைகளில் திறந்துவிடப்படுவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடா்பாக அக்கட்சியின் தென்காசி நகர பாஜக த... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழா: சங்கரநாராயண சுவாமி கோயில் இன்று பிடிமண் எடுக்கும் யானை கோமதி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (ஏப். 29) நடைபெறுகிறது. இக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் வ... மேலும் பார்க்க

கணினி பட்டா கோரி ஆட்சியிரிடம் மனு

சங்கரன்கோவில் பகுதியில் வசிக்கும் சுமாா் 300 பே தங்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவுக்கு மாற்றாக கணினிப் பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி திருவள்ளுவா்நகா், திருவுடையான்சாலை பகு... மேலும் பார்க்க

25 ஆண்டுகளுக்குப் பின் வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா 25 ஆண்டுகளுக்குப் பின் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இக்கோயிலில் பூக்குழி திருவிழா பல்வேறு பிரச்னைகளால் 25 ஆண... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். கடந்த மாதம் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலை... மேலும் பார்க்க

சிவகிரி அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் போலீஸாா் சிவராமலிங்கபுரம் வடக்குத் தெருவிலுள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா். அப... மேலும் பார்க்க