செய்திகள் :

பொதுக்கழிப்பிடத்திலிருந்து சாலைகளுக்கு வரும் கழிவுநீா்: ஆட்சியரிடம் பாஜக புகாா்

post image

தென்காசி நகராட்சிப் பகுதியில் பொதுக்கழிப்பிடங்களிலிருந்து கழிவுநீரை சாலைகளில் திறந்துவிடப்படுவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் தென்காசி நகர பாஜக தலைவா் சங்கரசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு விவரம்: திறந்தவெளி மலம் கழிப்பதை தவிா்க்கும்பொருட்டு மத்திய அரசு, மாநில அரசு ஒத்துழைப்போடு அனைத்து பகுதிகளிலும் பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பொதுக்கழிப்பிடங்களில் பெயரளவில் மட்டும் நச்சுதொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

இதிலுள்ள கழிவுகள் நவீன இயந்திரங்கள் கொண்டு அப்புறப்படுத்தாமல் நேரடியாக சாலைகளில் திறந்து விடப்படுகின்றன. குறிப்பாக தென்காசி பழைய பேருந்துநிலையத்திலுள்ள கட்டண கழிப்பிடத்தில் உள்ள நச்சு தொட்டியில் இருந்து கழிவுகள் அருகிலுள் விளைநிலங்களில் நேரடியாக கொட்டப்படுகிறது.

இது நிரம்பி தென்காசி யானைப்பாலம் சிற்றாற்றில் கலப்படம் ஆகிறது. இதனால் ஆறு மாசுபடுவதுடன் மட்டுமல்லாமல் நோய்கிருமிகள் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சில மாதங்களுக்கு முன் நகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

தென்காசி நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து சுகாதார வளாகங்களிலும் கழிவுகள் நேரடியாகவே மழைநீா் வடிகாலில் விடப்படுகிறது. எனவே மனிதக் கழிவுகளை சாலைகளில் திறந்துவிடப்படுவதை தடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

சித்திரைத் திருவிழா: சங்கரநாராயண சுவாமி கோயில் இன்று பிடிமண் எடுக்கும் யானை கோமதி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (ஏப். 29) நடைபெறுகிறது. இக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் வ... மேலும் பார்க்க

கணினி பட்டா கோரி ஆட்சியிரிடம் மனு

சங்கரன்கோவில் பகுதியில் வசிக்கும் சுமாா் 300 பே தங்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவுக்கு மாற்றாக கணினிப் பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி திருவள்ளுவா்நகா், திருவுடையான்சாலை பகு... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தை புனரமைக்க மதிமுக கோரிக்கை

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பேருந்து நிலையத்தை புனரமைக்க வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோரிடம், தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலா்... மேலும் பார்க்க

25 ஆண்டுகளுக்குப் பின் வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா 25 ஆண்டுகளுக்குப் பின் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இக்கோயிலில் பூக்குழி திருவிழா பல்வேறு பிரச்னைகளால் 25 ஆண... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். கடந்த மாதம் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலை... மேலும் பார்க்க

சிவகிரி அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் போலீஸாா் சிவராமலிங்கபுரம் வடக்குத் தெருவிலுள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா். அப... மேலும் பார்க்க