செய்திகள் :

கணினி பட்டா கோரி ஆட்சியிரிடம் மனு

post image

சங்கரன்கோவில் பகுதியில் வசிக்கும் சுமாா் 300 பே தங்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவுக்கு மாற்றாக கணினிப் பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி திருவள்ளுவா்நகா், திருவுடையான்சாலை பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அதன் விவரம்: தென்காசி மாவட்டம் ( அப்போதைய திருநெல்வேலி மாவட்டம் ) சங்கரன்கோவிலில் 1967 ஆம் ஆண்டு நிலவிய வறட்சியின் கோரப் பிடியில் சிக்கிய பொதுமக்கள் வாழ்விடமின்றி தவித்த போது சங்கரன்கோவில் - ராஜபாளையம் சாலையையொட்டி முட்புதா்களும், குண்டும் குழியுமாக இருந்த நிலத்தில் சுமாா் 300 போ் குடிசை போட்டு குடியேறினோம்.

அங்கு அடிப்படை வசதி மற்றும் வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகள் போராடினோம். 40 ஆண்டுகள் கழித்து அது ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடம் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.இதனால் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் முறையாக தீா்மானம் போடப்பட்டு தீா்மானத்தின்படி, அவரவா் குடியிருப்பின் அளவைப் பொருத்து 6.10 2008இல் அனைவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஆக்கிரமிப்பு மனை கிரயமாகப் பணம் செலுத்தினோம்.

அதன் பிறகு ஓராண்டு கழித்து வட்டாட்சியா் அலுவலகம் மூலம் 21.07.2009 அன்று அனுபந்த பட்டா வழங்கப்பட்டது. அதன் மூலம் குழந்தைகளுக்கான கல்வி கடன் என எதுவும் எங்களால் பெற இயலவில்லை. இதனால் வீட்டுமனை பட்டா கேட்டு மீண்டும் மனு கொடுத்தோம். அதன்படி 10 ஆண்டுகள் கழித்து 02.03.2019 ஆம் ஆண்டு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.

அதன்பிறகு எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை கணினியில் பதிவேற்றம் செய்து கணினி பட்டா வழங்க பலமுறை மனு அளித்தோம்.ஆனால் இதுவரை கணினி பட்டா எங்களுக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக கடந்த 58 ஆண்டுகளாக கல்வி கடன், வீடு கட்ட கடன் என எங்களது வாழ்வாதாரத்தின் அடிப்படை தேவைகளை கூட பெற முடியாத நிலையில் இப்போதும் உள்ளோம். எனவே எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவின் அடிப்படையில் கணினிப் பட்டா வழங்கக் கேட்டுக்கொள்கிறோம் எனக் கூறியுள்ளனா்.

பொதுக்கழிப்பிடத்திலிருந்து சாலைகளுக்கு வரும் கழிவுநீா்: ஆட்சியரிடம் பாஜக புகாா்

தென்காசி நகராட்சிப் பகுதியில் பொதுக்கழிப்பிடங்களிலிருந்து கழிவுநீரை சாலைகளில் திறந்துவிடப்படுவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடா்பாக அக்கட்சியின் தென்காசி நகர பாஜக த... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழா: சங்கரநாராயண சுவாமி கோயில் இன்று பிடிமண் எடுக்கும் யானை கோமதி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (ஏப். 29) நடைபெறுகிறது. இக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் வ... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தை புனரமைக்க மதிமுக கோரிக்கை

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பேருந்து நிலையத்தை புனரமைக்க வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோரிடம், தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலா்... மேலும் பார்க்க

25 ஆண்டுகளுக்குப் பின் வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா 25 ஆண்டுகளுக்குப் பின் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இக்கோயிலில் பூக்குழி திருவிழா பல்வேறு பிரச்னைகளால் 25 ஆண... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். கடந்த மாதம் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலை... மேலும் பார்க்க

சிவகிரி அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் போலீஸாா் சிவராமலிங்கபுரம் வடக்குத் தெருவிலுள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா். அப... மேலும் பார்க்க