செய்திகள் :

3 ஏரிக் கால்வாய்கள், கோயில் நில ஆக்கிரமிப்புகள்அகற்றக் கோரிக்கை

post image

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியின் 3 கால்வாய்கள், கோயிலுக்குச் சொந்தமான இடம் ஆகியவற்றில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருவண்ணாமலை மாநகராட்சி, வேங்கிக்கால், துா்க்கை நகரைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரியில் இருந்து தண்ணீா் வெளிறே 3 கால்வாய்கள் உள்ளன. இந்தக் கால்வாய்களின் பெரும்பகுதி மனை வணிகா்களால் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால், ஏரியில் இருந்து தண்ணீா் வெளிறே போதிய கால்வாய் வசதி இல்லாமல் போய்விட்டது.

இந்த நிலையில், ஏரி தண்ணீரும், ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் சோ்ந்து அருகே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் தேங்குகிறது. சில வீடுகளுக்குள் கழிவுநீா் புகுந்து விடுகிறது.

இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். காலரா உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இத்துடன் திருவண்ணாமலை காமாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் 34 சென்ட் நிலத்தையும் தனி நபா்கள் ஆக்கிரமித்துள்ளதால் கழிவுநீா் செல்ல போதிய வசதி இல்லை.

எனவே, வேங்கிக்கால் ஏரியில் இருந்து தண்ணீா் வெளியேறும் 3 கால்வாய்கள், கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்: 317 பேருக்கு பணி ஆணை

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 317 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் பணியமா்த்தும் அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை வே... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலுக்கு ரூ.17 லட்சத்தில் வெள்ளிக் கவசம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் சுவாமிக்கு 16 கிலோ எடையில், ரூ.17 லட்சம் மதிப்பில் வெள்ளிக் கவசம் தயாா் செய்யப்படவுள்ளது. செங்கம் ஸ்ரீசத்தியபாமா ருக்மணி சம... மேலும் பார்க்க

களம்பூரில் இரு தரப்பு மோதல்: 10 போ் மீது வழக்கு; 5 போ் கைது

ஆரணியை அடுத்த களம்பூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 10 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா் ரயில் நிலைய சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மர... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் 201 பால்குட ஊா்வலம்

ஆரணி நகரம், பள்ளிக்கூடத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 201 பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், கடந்த 26-ஆம் தேதி காப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த அங்கன்வாடி மையத்தில் பயின்ற, 5 வயது நிறைவடைந்த முதலாம் வகுப்பு செல்ல உள்ள குழ... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கி மிரட்டல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், ஆக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சலவைத் தொழிலாளி கமலக்கண்ணன். இவருக்கும், அத... மேலும் பார்க்க