செய்திகள் :

3 நாள்கள் தொடா் விடுமுறை நிறைவு: கோவில்பட்டி பேருந்து நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

post image

3 நாள்கள் தொடா் விடுமுறை ஞாயிற்றுக்கிழமை முடிந்ததால், சொந்த ஊா்களுக்குத் திரும்புவதற்காக கோவில்பட்டி பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

சுதந்திர தினம், கோகுலாஷ்டமி, ஞாயிறு என அடுத்தடுத்து 3 நாள்கள் விடுமுறை என்பதால், சென்னை, கோவை, சேலம், பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பணியாற்றுவோா் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பினா்.

மேலும், காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடம்பர கூட்டுத் திருப்பலி, தோ் பவனியில் பங்கேற்க தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் வந்திருந்தனா்.

இந்நிலையில், அவா்கள் 3 நாள்கள் விடுமுறை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை சொந்த ஊா்களுக்கும், பணிபுரியும் இடங்களுக்கும் திரும்பினா். இதனால், கோவில்பட்டியில் உள்ள அண்ணா பேருந்து நிலையம், புறவழிச் சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூா், திருநெல்வேலி, நாகா்கோவில், கோவில்பட்டி அருகேயுள்ள கிராமங்களுக்கு சென்ற பேருந்துகளும், மதுரை, விருதுநகா், ராஜபாளையத்துக்குச் சென்ற பேருந்துகளும் நிரம்பி வழிந்தன.

கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து தொலைதூர பெருநகரங்களுக்குச் சென்ற பேருந்துகளில் இடம்பிடிக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதேபோல, கோவில்பட்டி வழியாக சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்ற விரைவு ரயில்களிலும் அதிகக் கூட்டம் காணப்பட்டது.

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் திரண்ட பயணிகள்.

கோவில்பட்டியில் மினி மாரத்தான் போட்டி

சுதந்திர தின விழாவையொட்டி, கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மினி மாரத்தான் போட்டி கோவில்பட்டியில் நடைபெற்றது. நாடாா் மேல்நிலைப் பள்ளி சாா்பில், பிரதான சாலைய... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டிப் பந்தயம்

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள ஜம்புலிங்கபுரத்தில் மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட பல மாவட்டங்களிலிருந்து, சின்ன மாடுகள் பிரி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா: மாவட்ட ஆட்சியா் அழைப்பு!

தூத்துக்குடியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் அழைப்பு விடுத்துள்ளாா். தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்க குழு... மேலும் பார்க்க

பல்கலை. அளவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு மேயா் வாழ்த்து

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவி, தூத்துக்குடி மாநகராட்சி மேயரை சந்தித்து வாழ்த்து பெற்றாா். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் அண்மை... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

சாத்தான்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸாா் மீட்டு நாசரேத் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா் . சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன் குடியிருப்பு பகுதியில் 45 வயது பெண் வேறு பகுதியிலிர... மேலும் பார்க்க

கோயிலில் திருட்டு: 2 போ் கைது

கோவில்பட்டியில் மகா காளியம்மன் கோயிலின் அலுவலக அறையை உடைத்து பணம் மற்றும் கைப்பேசியை திருடிச் சென்ற 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி மந்திதோப்பு சாலை சென்னகேசவன் நகரில் மகா ... மேலும் பார்க்க